பணயக்கைதியாக பிடிக்கப்பட்டவர்களில் சிலர் உயிரிழந்திருக்கலாம் என அறிவிப்பு!
![](https://iftamil.com/wp-content/uploads/2023/12/gaza-jpg.webp)
பணயக்கைதியாக பிடிக்கப்பட்டவர்களில் சிலர் உயிரிழந்திருக்கலாம் என இஸ்ரேலிய மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
மூன்று நபர்களைக் கொண்ட மருத்துவக் குழு, கடந்த 7ஆம் திகதியன்று ஹமாஸ் நடத்திய தாக்குதலின் வீடியோக்களில் கடத்தப்பட்டவர்களில் காயங்கள் ஏற்பட்டதற்கான அறிகுறிகளையும், தற்போது விடுவிக்கப்பட்டுள்ள பணயக்கைதிகள் வழங்கும் சாட்சியங்களையும் ஆய்வு செய்து வருகின்றனர்.
இதன் அடிப்படையிலேயே இஸ்ரேலிய மருத்துவ நிபுணர்கள் மேற்படி அறிவித்துள்ளனர். குழுவின் தலைவரான சுகாதார அமைச்சின் அதிகாரி ஹகர் மிஸ்ராஹி கூறுகையில், பணயக்கைதிகள் இறந்துவிட்டார் என்பதைத் தீர்மானிக்க போதுமானதாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
கடத்தப்பட்ட சுமார் 240 பேரில் 108 பேர் ஹமாஸால் விடுவிக்கப்பட்டனர். போர்நிறுத்தம் முடிவடைந்த பின்னர், இஸ்ரேலிய அதிகாரிகள் ஆறு பொதுமக்கள் மற்றும் ஒரு இராணுவ கர்னல் சிறைப்பிடிக்கப்பட்ட நிலையில் இறந்துவிட்டதாக அறிவித்துள்ளனர். இதை ஹமாஸ் உறுதிப்படுத்தவில்லை.