உலகம்

“வன்முறையின் சூறாவளியில்” ஆயிரக்கணக்கான குழந்தைகள் பலி : போப் பிரான்சிஸ் கண்டனம்

உக்ரைன், காசா பகுதி மற்றும் யேமன் ஆகிய நாடுகளில் “வன்முறையின் சூறாவளியில்” ஆயிரக்கணக்கான குழந்தைகள் இறந்ததை போப் பிரான்சிஸ் கண்டித்துள்ளார். பிரான்சிஸ் அமைதிக்கான பல முறையீடுகளை விடுத்துள்ளார் மற்றும் புதன்கிழமை இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் போராளிகளுக்கு இடையே “உடனடி மனிதாபிமான போர்நிறுத்தத்திற்கு” அழைப்பு விடுத்தார். “இந்தக் கடைசிப் போரில் காஸாவில் எத்தனை குழந்தைகள் இறந்திருக்கிறார்கள் தெரியுமா? 3,000க்கு மேல். இது நம்பமுடியாதது, ஆனால் அது உண்மைதான், ”என்று பிரான்சிஸ் கூறியுள்ளார். “மற்றும் உக்ரைனில் 500 க்கும் அதிகமானோர் […]

இலங்கை

வவுனியா : கலாசார விழாவில் துறை சார்ந்த ஒன்பது பேருக்கு கலாநேத்ரா விருது

வவுனியா பிரதேச செயலக கலாசார விழாவில் துறை சார்ந்த ஒன்பது பேருக்கு கலாநேத்ரா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளனர் வவவுனியா பிரதேச செயலகமும், வட மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும், வவுனியா பிரதேச கலாசார பேரவையும் இணைந்து ஏற்பாடு செய்த வவுனியா பிரதேச கலாசார பெருவிழா நேற்றையதினம் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. வவுனியா பிரதேச செயலாளர் நா.கமலநாதன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் வவுனியா பிரதேசத்தில் கலைத்துறை வளர்ச்சிக்காக அளப்பரிய பங்களிப்பினை நல்கிய துறை சார்ந்த ஒன்பது பேருக்கு கலாநேத்ரா […]

பொழுதுபோக்கு

படத்தின் ரிலீஸ் திகதி வெளியிடுதல் தொடர்பில் லோகேஷ் எடுத்துள்ள திடீர் முடிவு!

  • December 15, 2023
  • 0 Comments

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய ’லியோ’ படம் கடந்த அக்டோபரில் வெளியானது. இந்தப் படத்திற்கு கலவையான விமர்சனம் வந்ததாலும் 600 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து இந்த ஆண்டின் சூப்பர் ஹிட் படங்கள் பட்டியலில் இடம்பெற்றது. இதையடுத்து அடுத்ததாக ரஜினியை வைத்து ‘தலைவர் 171’ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இது தொடர்பாக பேட்டி ஒன்றில் பேசியிருக்கும் லோகேஷ், ”லியோ படம் சக்சஸ் கொடுத்திருந்தாலும் படத்தின் பின் பாதி சரியாக எடுக்கப்படவில்லை என்று பரவலாக […]

இலங்கை

திருமலையில் பெண்களுக்கான பாதுகாப்பு இல்லம் ஒன்றை திறந்து வைத்த கிழக்கு ஆளுநர்

  • December 15, 2023
  • 0 Comments

பெண்களுக்கான பாதுகாப்பு இல்லம் திருகோணமலையில் உத்தியோகபூர்வமாக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் திறந்து வைக்கப்பட்டது. கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களமும், USAID ,SCORE அமைப்புடன் இணைந்து சமூக ஒத்திசைவு மற்றும் நல்லிணக்க செயற்பாடு திட்டத்தின் கீழ் திருகோணமலை மாவட்டத்தில் வன்முறைகளால் பாதிக்கப்பட்ட பெண்களை பாதுகாத்து வைக்கும் நோக்கில் அமைக்கப்பட்ட பாதுகாப்பு இல்லம் இன்று வெள்ளிக்கிழமை (15) திறந்து வைக்கப்பட்டது. திருகோணமலை மாவட்டத்தில் இனங்காணப்பட்ட பிரதான பிரச்சனைகளாக பாலியல் சமத்துவமின்மை,பாலியல் ரீதியான வன்முறைகள், இளம் வயது […]

இலங்கை

யாழில் நில அளவைத் திணைக்களத்தினருக்கு எதிராக காணி உரிமையாளர்கள் போராட்டம்

யாழ்ப்பாணம் கீரிமலை பகுதியில் காணி அளவீட்டுக்கு சென்ற நில அளவைத் திணைக்களத்தினருக்கு எதிராக காணி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து நில அளவை திணைக்களத்தினர் திரும்பி சென்றுள்ளனர். யாழ்ப்பாணம் – கீரிமலை ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள பகுதியை நகர அபிவிருத்தி அதிகார சபையிடம் கையளிக்கும் நோக்கில் இன்றைய தினம்(15) அளவீடு செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து ஒன்றுகூடிய காணி உரிமையாளர்கள் நில அளவை திணைக்களத்தினரின் வாகனத்தை மறித்து கோஷங்களை எழுப்பினர். இதன்போது அப்பகுதியில் பொலிஸார் குவிக்கப்பட்டனர். தெல்லிப்பளை பிரதேச […]

ஐரோப்பா

உக்ரைனுக்கு எதிர்பாராத அதிர்ச்சியை அளித்த ஹங்கேரி…

  • December 15, 2023
  • 0 Comments

உக்ரைனுக்கு ஐரோப்பிய ஒன்றியம் அளிப்பதாக இருந்த பல பில்லியன் யூரோ நிதியுதவியை ஹங்கேரி தடுத்துள்ளது. குறித்த விவகாரம் தொடர்பில்  ஹங்கேரி பிரதமர் Viktor Orban தெரிவிக்கையில், உக்ரைனுக்கான மேலதிக நிதியுதவியை தடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.ஆனால் உக்ரைனுக்கான உதவிகள் தொடர்பான பேச்சுவார்த்தை அடுத்த ஆண்டு தொடக்கத்தில் மீண்டும் தொடங்கும் என ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் தெரிவித்தனர். ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் உக்ரைனுடன் உறுப்பினர் பேச்சுவார்த்தையைத் தொடங்க முடிவு செய்த சிறிது நேரத்திலேயே விக்டர் ஓர்பன் அந்த நாட்டுக்கான நிதியுதவித் தொடர்பான […]

உலகம்

புலம்பெயர்ந்தவர்களை ஏற்றிச் சென்ற படகு விபத்து : 66பேர்க்கு நேர்ந்த துயரம்

பிரெஞ்சு கடற்கரையிலிருந்து 8 கிமீ தொலைவில் புலம்பெயர்ந்தவர்களை ஏற்றிச் சென்ற படகு விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றொருவர் ஆபத்தான நிலையில் உள்ளார். பிரெஞ்சு கடலோர காவல்படையின் கூற்றுப்படி, படகில் 66 பேர் இருந்துள்ளனர். உயிர் பிழைத்தவர்கள் Calais க்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர், அங்கு காயமடைந்த நபர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். வான் மற்றும் கடல் வழியாக தேடுதல் வேட்டை தொடர்வதாக கடலோர காவல்படையினர் தெரிவித்துள்ளனர். உள்ளூர் நேரப்படி 01:15 மணிக்கு (00:15 GMT) படகை அடைந்ததாக […]

இலங்கை

ஹங்கவெல்ல பிரதேசத்தில் ஒரு பெண்ணுக்காக படுகொலை செய்யப்பட்ட பஸ் சாரதி!

  • December 15, 2023
  • 0 Comments

ஹங்வெல்ல, தும்மோதர சந்திக்கு அருகில் இன்று (15) காலை பஸ் சாரதி ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். படுகொலை செய்யப்பட்ட நபர் இன்று காலை 5.55 மணியளவில் புத்தரை வழிபடுவதற்காக பூ பறிக்கச் சென்ற போது இந்தச் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஹங்வெல்ல பொலிஸார் தெரிவித்தனர். கொலை செய்யப்பட்ட நபர் மற்றும் சந்தேகநபர் ஆகிய இருவரும் ஒரே பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்ததாகவும், மோதல் காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாகவும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கொலையை செய்த […]

உலகம்

எல்லை தாண்டிய ஹமாஸ் பயங்கரவாத சதித்திட்டம்: நான்கு பேர் கைது

எல்லை தாண்டிய ஹமாஸ் பயங்கரவாத சதித்திட்டத்தில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில்  ஜேர்மனி மற்றும் நெதர்லாந்தில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், ஜேர்மனியில் மூவர் மற்றும் நெதர்லாந்தில் ஒருவர் யூத நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கான திட்டங்கள் தொடர்பாக கைது செய்யப்பட்டதாக அரசு வழக்கறிஞர் கூறுகிறார் மேலும் மூன்று பேர் டென்மார்க்கில் தனித்தனியான பயங்கரவாதக் குற்றங்களுக்காகக் கைது செய்யப்பட்டனர், மேலும் அந்நாட்டின் அரசியல்வாதிகள் அவர்களுக்கும் ஹமாஸுடன் தொடர்புடையவர்கள் என்று சுட்டிக்காட்டினர்,

பொழுதுபோக்கு

சிறகடிக்க ஆசை சீரியலில் திடீர் மாற்றம் – என்ன தெரியுமா?

  • December 15, 2023
  • 0 Comments

விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. முத்து-மீனா கதாபாத்திரம் தான் சீரியலின் ஹைலைட் ஜோடியாக உள்ளது. இப்போது கதையில் ரவிக்கு அறை இல்லாதது தான் பிரச்சனையே. இன்றைய எபிசோடில் அதற்கும் ஒரு முடிவு எடுக்கிறார் அண்ணாமலை. தனது அறையை ரவிக்கு கொடுத்துவிட்டு ஹாலில் படுத்துக் கொள்கிறார். இப்போது அடுத்து கதையில் என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இப்போது என்னவென்றால் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் மாலை 7.30 […]

error: Content is protected !!