பொழுதுபோக்கு

பிரபல நடிகை தூங்கும் போது இயக்குநர் செய்த வேலை… கடுப்பாகிய நடிகை

  • September 11, 2023
  • 0 Comments

நடிகை மஹிமா நம்பியார் மலையாளத்தில் சில படங்களில் நடித்ததையடுத்து தமிழில் சாட்டை என்ற படத்தில் சமுத்திரக்கனியுடன் இணைந்து அவரது மாணவியாக நடித்திருந்தார். இந்தப் படம் அவருக்கு சிறப்பாக கைகொடுத்தது. நல்ல நடிகை என்ற பெயரையும் பெற்றுத் தந்தது. சாட்டை படத்தின் வெற்றியை அடுத்து புரியாத புதில், கொடி வீரன், இரவுக்கு ஆயிரம் கண்கள் போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் ஆர்யாவுடன் மகாமுனி என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படத்திற்கு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றதோடு, சர்வதேச […]

இலங்கை

திருமலை -சட்ட விரோத வலைகள் மூலம் மீன்பிடி… ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள்

  • September 11, 2023
  • 0 Comments

சட்டவிரோத வலைகளை பயன்படுத்தி மீன்பிடிப்பதற்கு எதிராக திருகோணமலை சிறிமாபுர மீனவர்கள் இன்று (11) வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருகோணமலை கடற்பரப்பில் தடைசெய்யப்பட்ட சுருக்கு வலை மற்றும் டிஸ்கோ வலைகளை பயன்படுத்தி மீன் பிடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அதனை தடை செய்யக் கோரியும் சிறிமாபுர மீனவ குழுவொன்று இன்று (11) ஜமாலியா பகுதியில் திருகோணமலை – நிலாவெளி பிரதான வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருகோணமலை, ஜமாலியா பகுதியைச் சேர்ந்த மீனவர்களும் சமுத்ராகம பகுதியைச் சேர்ந்த மீனவர்களும் […]

இலங்கை

கொழும்பில் தொழிற்சங்க நடவடிக்கையில் இறங்கிய ரயில் ஊழியர்கள்!

  • September 11, 2023
  • 0 Comments

கொழும்பில் உள்ள புகையிரத  ஊழியர்கள் குழுவொன்று அவசர தொழில்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது. இதன் காரணமாக குறித்த புகையிரத தளங்களில்  இருந்து பயணிக்கத் திட்டமிடப்பட்டுள்ள ரயில்கள் இயங்காது எனத் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், நாளைய (12.09) தினம்  புகையிரத வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக லோகோமோட்டிவ் ஒப்பரேட்டிங் பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த வேலைநிறுத்தம் குறித்து தொழிற்சங்கம் நிர்வாக அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தற்போது அங்கீகரிக்கப்பட்ட அமைச்சரவை தீர்மானங்களின் அடிப்படையில் ஆட்சேர்ப்பு நடைமுறையை திருத்தியமைத்து, ஏறக்குறைய 5 வருடங்களாக தாமதமாகி வரும் […]

இலங்கை

பேருந்துகளுக்கு இடையில் ஏற்பட்ட போட்டியால் நேர்ந்த விபரீதம்!

  • September 11, 2023
  • 0 Comments

அம்பலாந்தோட்டை பகுதியில் தனியார் பேருந்து ஒன்று மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதனால் அம்பலாந்தோட்டை பகுயை அண்மித்துள்ள பெரும்பாலான பகுதிகளுக்கு மின்சாரம் தடைபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இரு தனியார் பேருந்துகளுக்கு இடையில் ஏற்பட்ட போட்டியில் பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து  மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இது குறித்த விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

இலங்கை

நுரைச்சோலை ஆலையில் பொறியியலாளர்கள் பற்றாக்குறை!

  • September 11, 2023
  • 0 Comments

நுரைச்சோலை நிலக்கரி ஆலையை இயக்க பொறியியலாளர்கள் பற்றாக்குறை நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக நவம்பர் மாதம் முதல் ஜெனரேட்டர்களை இயக்குவதில் சிக்கல் ஏற்படும் என அதிகாரிகள் கூறியுள்ளனர். ஆலையில் குறைந்தபட்சம் 40 எலக்ட்ரிக்கல் மற்றும் மெக்கானிக்கல் இன்ஜினியர்கள் இருக்க வேண்டும் என்றும் ஆனால் இதுவரை 34 பேர் மாத்திரமு உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. எஞ்சிய குழுவினர் ஏற்கனவே வெளிநாடு சென்றுள்ள நிலையில், மேலும் பத்து பேர் அடுத்த இரண்டு மாதங்களுக்குள் வெளிநாடு செல்ல தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது. மூன்றாவது ஜெனரேட்டர் […]

மத்திய கிழக்கு

சூடான்: தலைநகர் மீது ராணுவம் நடத்திய டிரோன் தாக்குதல் -40 பேர் பலி !

  • September 11, 2023
  • 0 Comments

ஆப்பிரிக்க நாடான சூடானில் ராணுவ ஆட்சி நடக்கிறது. அதனை எதிர்த்து துணை ராணுவத்தினர் போராடி வருகிறார்கள். இதனால் இருதரப்புக்கும் இடையே மோதல் நிலவி வருவதோடு உள்நாட்டு கலவரத்தில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.பல்லாயிரக்கணக்கில் படுகாயம் அடைந்து வருகிறார்கள். இந்நிலையில் சூடான் தலைநகர் கார்டோமில் ராணுவத்தினர் டிரோன்களை வீசி திடீர் தாக்குதல் நடத்தியுள்ளனர் இது திசைமாறி அருகே உள்ள மார்க்கெட் பகுதியில் விழுந்தது. இந்த தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 40 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். மேலும் 70 க்கும் […]

உலகம்

மொராக்கோ நிலநடுக்கம் – 3 நாட்கள் தேசிய துக்க தினம் அறிவிப்பு

  • September 11, 2023
  • 0 Comments

ஆப்பிரிக்க நாடுகளுள் ஒன்றான மொராக்கோவில் 6.8 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. முக்கிய சுற்றுலா தலமான மராகேஷ் அருகே உள்ள அட்லஸ் மலைப்பகுதியில் சுமார் 18.5 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டு இந்த நிலநடுக்கம் உருவானது. தலைநகர் ரபாத், காசா பிளாங்கா உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இதன் தாக்கம் உணரப்பட்டது. இதனால் மராகேஷ் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. சீட்டுக்கட்டுபோல சரிந்து விழுந்த இந்த கட்டிட […]

இலங்கை

ஜெனிவாவில் ஆரம்பமாகும் ஐ.நா கூட்டத்தொடர் : இலங்கை குறித்து ஆராயப்படும்!

  • September 11, 2023
  • 0 Comments

ஐ.நா மனித உரிமை பேரவையின் 54 ஆவது கூட்டத்தொடர் இன்று (11.09) ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளது. பேரவையின் தலைவர் வக்லெவ் பலெக்கின் தலைமையில் ஆரம்பமாகும் இந்த கூட்டத்தொடர் ஒரு மாதங்களுக்கு நடைபெறவுள்ளதுடன், கூட்டத்தொடரின் ஆரம்ப உரையை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் ஆற்றவுள்ளார். இதன்போது இலங்கை தொடர்பாக முன்பு கொண்டுவரப்பட்ட 51/1 தீர்மானத்தின் முன்னேற்றம் குறித்து ஆராயப்படவுள்ளதுடன், நாட்டின் தற்போதைய மனித உரிமை நிலைவரம் குறித்து ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை குறித்த கூட்டத்தொடரில் […]

இலங்கை

நாடாளாவிய ரீதியில் போராட்டத்தை முன்னெடுக்கும் வைத்திய அதிகாரிகள்!

  • September 11, 2023
  • 0 Comments

நாடளாவிய ரீதியில் பிரதான வைத்தியசாலைகளுக்கு முன்பாக இன்றும் (11.09) நாளையும் கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்துவதற்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது. நாட்டில் வைத்தியர்களை தக்கவைத்துக்கொள்வதற்கான வேலைத்திட்டத்தை தயாரிப்பதில் அரசாங்கம் தாமதம் செய்து வருவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலேயே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று மதிய உணவு நேரத்தில் வைத்தியசாலைகளுக்கு முன்பாக மௌனப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அந்த சங்கத்தின் செயலாளர் டொக்டர் ஹரித அளுத்கே தெரிவித்துள்ளார். எதிர்கால நடவடிக்கை குறித்து தீர்மானிக்க சங்கத்தின் விசேட […]

இலங்கை

கொக்கு தொடுவாய் அகழ்வுப்பணியில் புதிய கட்டுப்பாடு! உண்மைகள் மறைக்கப்படும் அபாயம்

  • September 11, 2023
  • 0 Comments

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணியானது பல்வேறு எதிர் பார்ப்புகளுக்கு மத்தியில் ஐந்தாம் நாளாக இன்று தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது. குறித்த அகழ்வாய்வின் போது நான்கு மனித எச்சங்கள் அடையாளப்படுத்தப்பட்டிருந்ததுடன் இரண்டு மனித எச்சங்கள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்ட நிலையில் இன்றும் ஐந்தாம் நாள் தொடர்சியாக அகழ்வுபணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் குறித்த அகழ்வு பணியில் இடம்பெற்ற தவறுகளை சுட்டிக்காட்டியதன் பின்னணியில் கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு நடவடிக்கையில் ஊடகங்களுக்கு புதிய கட்டுப்பாடு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதாவது […]

error: Content is protected !!