இலங்கை

யாழில் விடுதியில் சடலமாக மீட்கப்பட்ட சிறுமி – விசாரணையில் வெளிவரும் அதிர்ச்சி தகவல்

  • September 14, 2023
  • 0 Comments

திருநெல்வேலி பகுதியில் விடுதியிலிருந்து 12 வயதுச் சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், சிறுமியின் அம்மம்மா கொலைக் குற்றச்சாட்டில் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளதாக தெரியவருகிறது. சிறுமி தனது அம்மம்மாவினால் நஞ்சூட்டிக் கொல்லப்பட்டமை உறுதியானதையடுத்து, 53 வயதான ஓய்வு பெற்ற குடும்ப நல உத்தியோகத்தரை இன்று நீதிமன்றத்தில் பொலிஸார் முற்படுத்தப்படவுள்ளனர். யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியொன்றில் நேற்று முன்தினம் சிறுமியொருவர் சடலமாகவும் மற்றொரு பெண் மயக்கமுற்ற நிலையிலும் மீட்கப்பட்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை […]

இலங்கை

இலங்கை கடற்பரப்பில் சுற்றிவளைக்கப்பட்ட இந்திய மீனவர்கள்!

  • September 14, 2023
  • 0 Comments

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்த குற்றச்சாட்டில் குறித்த 19 பேரும் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது 3 படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட மீனவர்கள் காங்கேசன்துறை கடற்படை முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இன்று(14) மயிலிட்டி துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டு நீரியல் வள திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ள குறித்த மீனவர்கள், ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்

அறிந்திருக்க வேண்டியவை அறிவியல் & தொழில்நுட்பம் இந்தியா

வானில் நடந்த அதிசயம்.. – நேரில் பார்த்து பீதியில் உறைந்த மக்கள்

  • September 14, 2023
  • 0 Comments

இந்தியாவில் தாம்பரம் சுற்றுவட்டாரப்பகுதியில் வானில் தோன்றிய மர்ம ஒளியால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். மழை பெய்வதற்கு சிறிது நேரத்திற்கு முன்பு திடீரென வானில் தோன்றிய ஒளிகள் அங்குமிங்கும் ஓடிக்கொண்டு இருந்த நிலையில் சடுதியாக ஒரே நேர்கோட்டுக்கு வந்து திடீரென மறைந்துள்ளன.இதன்போது, கடும் காற்றும் வீசியதுடன், மழை பெய்தமையும் குறிப்பிடத்தக்கது. குறித்த ஒளிகள் வானில் டாச் லைட் (Torchlight) அடிப்பதைப்போன்று இருந்ததாகவும் கூறப்படுகின்றது. இதேவேளை, மொரோக்கோவில் நிலநடுக்கம் ஏற்படுவதற்குமுன் வானத்தில் மர்மமான ஒளி தென்பட்டதாக சமூக ஊடகத் […]

ஐரோப்பா

ரஷ்யாவில் பதிவு செய்யப்பட்ட கார்கள் நுழைவதை தடை செய்த எஸ்டோனியா

  • September 14, 2023
  • 0 Comments

ரஷ்ய உரிமத் தகடுகளைக் கொண்ட வாகனங்களை இனி நாட்டிற்குள் நுழைய அனுமதிப்பதில்லை என எஸ்டோனியா முடிவு செய்துள்ளது. ரஷ்ய-பதிவு செய்யப்பட்ட அனைத்து வாகனங்களுக்கும் நுழைவதைத் தடைசெய்யும் முடிவை எஸ்டோனியாவின் வெளியுறவு அமைச்சர் மார்கஸ் சாக்னா அறிவித்தார். ரஷ்யர்களுக்கு நாட்டில் வரவேற்பு இல்லை என்றும், ரஷ்ய உரிமத் தகடுகளைக் கொண்ட கார்கள் எஸ்டோனியாவுக்குள் நுழைவதைத் தடைசெய்வது சரியானது என்றும் அமைச்சர் சாக்னா கூறினார், அதற்கமைய, ரஷ்யாவில் பதிவுசெய்யப்பட்ட அனைத்து வாகனங்களுக்கும் நுழைவதை எஸ்டோனியா மறுக்கும். உக்ரைன் வெற்றி பெறும் […]

இலங்கை

இலங்கையர்களுக்கு பொலிஸார் விடுத்த எச்சரிக்கை!

  • September 14, 2023
  • 0 Comments

இலங்கையில் பொலிஸ் அதிகாரிகளைப் போல் ஆள்மாறாட்டம் செய்பவர்களிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுத்தப்பட்டுள்ளது. இது பொலிஸார் பொதுமக்களுக்கு விசேட அறிவிப்பொன்றை வௌியிட்டுள்ளனர். பொதுமக்களின் பயணப்பை, வாகனங்கள், வீடுகள், மோட்டார் சைக்கிள்கள் போன்றவற்றைச் சோதனை செய்வது அவசியம் எனக்கூறி சிவில் உடையில் பொலிஸ் அதிகாரிகள் போல் நடித்து சொத்துக்களை கொள்ளையடிக்கும் சம்பவங்கள் பல பிரதேசங்களில் பதிவாகி வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகம், குற்றப்புலனாய்வு திணைக்களம் அல்லது விசேட பொலிஸ் பிரிவுகளின் அதிகாரிகள் தவிர, எந்தவொரு சந்தர்ப்பத்திலும் […]

பொழுதுபோக்கு

அப்பாவை பார்க்க அமெரிக்காவில் இருந்து வந்த தளபதி – S.A.C எமோர்ஷனல் ட்வீட்

  • September 14, 2023
  • 0 Comments

தந்தைக்கு ஆபரேஷன் என தெரிந்ததும் அமெரிக்காவில் இருந்து அவசர அவசரமாக கிளம்பி வந்த நடிகர் விஜய், எஸ்.ஏ.சி உடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது. நடிகர் விஜய் நடித்த லியோ படம் ரிலீஸுக்கு தயாராகி வரும் அதே வேளையில், அவர் தனது அடுத்த படமான தளபதி 68 பட பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார். வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக உள்ள இப்படத்தின் டெஸ்ட் ஷூட்டிற்காக அண்மையில் அமெரிக்கா சென்றிருந்தார் விஜய். அங்கு சில நாட்கள் தங்கி […]

ஆசியா

வியட்நாமில் குடும்பமே பலியான பரிதாபம் – தீ விபத்து தொடர்பில் அதிர்ச்சி தகவல்

  • September 14, 2023
  • 0 Comments

வியட்நாம் தலைநகர் ஹனோயின் குடியிருப்புக் கட்டடத்தில் ஏற்பட்ட தீயில் 50க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த தங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளனரா என்று அறிய உற்றார் உறவினர் சவக்கிடங்கைச் சுற்றிக் கூடியுள்ளனர். அந்த 10 மாடிக் கட்டடத்தில், ஒரே ஓர் அவசரகால வெளியேறும் வழி மட்டுமே இருந்தது. செவ்வாய்க்கிழமை இரவு, குடியிருப்பாளர்கள் தூங்கிக் கொண்டிருந்த வேளையில் தீப்பற்றியது. தீயிலிருந்து, தப்பிக்க மக்கள் கூச்சலிட்டதைக் கேட்க முடிந்ததாக அக்கம்பக்கத்தினர் கூறினர். சம்பவத்தில் 56 பேர் உயிரிழந்த நிலையில் 37 பேர் […]

இலங்கை

இந்தியாவுடன் இறுதி போட்டியில் களமிறங்க போவது யார்.?

  • September 14, 2023
  • 0 Comments

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது இந்த வருடம் இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. இதில் தற்போது இறுதி போட்டிக்கு செல்லும் ‘சூப்பர் 4’ சுற்றுகள் நடைபெற்று வருகின்றன. சூப்பர் 4 சுற்றில் இன்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியும், இலங்கை கிரிக்கெட் அணியும் மோதவுள்ளன. ஏற்கனவே நடந்த சூப்பர் 4 சுற்றுகளில் இந்திய அணியானது பாகிஸ்தானை 228 ரன்கள் வித்தியாசத்திலும், இலங்கையை 42 ரன்கள் வித்தியாசத்திலும் வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது. அடுத்ததாக, நாளை இந்திய […]

இலங்கை

இலங்கையில் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை வெளியிட நடவடிக்கை

  • September 14, 2023
  • 0 Comments

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் எதிர்வரும் சில தினங்களில் வர்த்தமானியில் வெளியிடப்படும் என வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்தார். தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையில், சர்வதேச அளவுகோல்களின்படி இந்த புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்நாட்டு மக்களின் மனித உரிமைகளை பாதுகாக்கும் வகையில் சமநிலையான சட்டமொன்றைக் கொண்டுவரும் நோக்கில் தற்போதுள்ள பயங்கரவாத தடைச் சட்டம் திருத்தப்பட்டதாகவும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் புதிதாக 1000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை!

  • September 14, 2023
  • 0 Comments

ஒன்லைன் பொருட்கள் விநியோகத்தில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான அமேசான், எதிர்வரும் பண்டிகை காலத்தை ஆரம்பித்து ஆஸ்திரேலியாவில் புதிதாக 1000 ஆட்சேர்ப்புகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளது. பண்டிகைக் காலங்களில் தடையின்றி விநியோக மையங்களின் விநியோகத்தை சிறப்பாகச் செய்வதே இதன் நோக்கமாகும். அதன்படி, சிட்னி, மெல்போர்ன், பெர்த், பிரிஸ்பேன், அடிலெய்ட், நியூகேஸில் மற்றும் கோல்ட் கோஸ்ட் ஆகிய இடங்களில் வசிக்கும் மக்கள் இந்த நாட்களில் இந்த புதிய வேலை வாய்ப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம். கோடை விடுமுறையில் திறமையாக பணியாற்றக்கூடிய பள்ளி மாணவர்கள் […]

error: Content is protected !!