2 வருடங்களில் வெளிநாடுகளுக்குச் சென்ற மின்சார சபையின் 159 பொறியியலாளர்கள்
Tech tests electronic equipment in service centre
இலங்கை மின்சார சபையில் பணிபுரிந்த 159 பொறியியலாளர்கள் இரண்டு வருடங்களுக்குள் வெளிநாடு சென்றுள்ளதாக இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் தனுஷ்க பராக்கிரமசிங்க இன்று (15) தெரிவித்துள்ளார்.
மற்றும் 105 பொறியியலாளர்கள் தமது சேவையை விட்டு விலகியுள்ளதுடன் மேலும் 54 பேர் உத்தியோகபூர்வ விடுமுறை பெற்றுச் சென்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பொறியியலாளர் பிரிவில் பணிபுரிந்து மிகவும் சிக்கலான கடமைகளில் ஈடுபட்ட அனுபவம் வாய்ந்த பொறியியலாளர்கள் தமது பணியை மேலும் துறந்தால் இலங்கை மின்சார சபை கடும் நெருக்கடிக்கு உள்ளாகும் நிலை ஏற்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
விடுமுறை பெற்று வெளிநாடுகளில் தொழில் புரியும் அதிக எண்ணிக்கையான பொறியாளர்கள் மீண்டும் பணிக்கு திரும்புவார்கள் என்ற நம்பிக்கை இல்லை என்றும் தெரிவித்தார்.





