இந்தியா

மத்தியப் பிரதேசத்தில் இரு தனித்தனி துர்கா சிலை கரைப்பு சம்பவங்களில் 10 குழந்தைகள் உட்பட 13 பேர் பலி

மத்தியப் பிரதேசத்தில் வியாழக்கிழமை(02) நடைபெற்ற துர்கா தேவி சிலைகள் கரைப்பின் போது ஏற்பட்ட இரண்டு தனித்தனி விபத்துகளில் 10 குழந்தைகள் உட்பட குறைந்தது 13 பேர் உயிரிழந்தனர்.மீட்புப் பணிகள் இன்னும் நடந்து வருகின்றன

முதல் சம்பவத்தில், உஜ்ஜைன் அருகே உள்ள இங்கோரியாவில் பக்தர்களை ஏற்றிச் சென்ற டிராக்டர் சம்​பல்(Chambal)  நதி​யின் மேல் கட்டப்பட்டுள்ள பாலத்​தின் மீது நிறுத்​தப்​பட்​டது. அப்​போது 12 வயதுச் சிறு​வன் திடீரென டிராக்டர் இயந்திரத்தை இயக்கியதால் குழந்தைகளுடன் நிரம்பிய அந்த வாகனம், முன்னோக்கிச் சென்று தண்டவாளத்தை உடைத்து ஆற்றில் விழுந்தது.

உள்ளூர்வாசிகள் 11 குழந்தைகளை மீட்டனர், ஆனால் அவர்களில் இருவர் சிகிச்சையின் போது உயிரிழந்தனர், அதே நேரத்தில் ஒரு குழந்தை மாயமாகியுள்ளது. மாநில பேரிடர் மீட்புப் படை (SDRF) குழுக்களுடன் இணைந்து காவல்துறையினர் ஆற்றங்கரையில் தேடி வருகின்றனர். பின்னர் ஒரு கிரேன் மூலம் நீரில் மூழ்கிய டிராக்டர் தண்ணீரில் இருந்து மீட்டது.

காண்ட்வா மாவட்டத்தின் பாந்தனா தாலுகாவில் நடந்த ஒரு தனி விபத்தில், அர்த்லா, ஜம்லி கிராமங்​களைச் சேர்ந்த ஏறக்குறைய 30 பேர் துர்கை சிலைகளை நீர்​நிலைகளில் கரைக்க டிராக்​டரில் எடுத்துச் சென்​றபோது, அந்த டிராக்டர் அருகில் இருந்த ஏரியில் கவிழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் அதிகாரிகள் இதுவரை எட்டு சிறுமிகளின் உடல்கள் உட்பட 11 உடல்களை மீட்டுள்ளனர், அதே நேரத்தில் டைவர்ஸ் குளத்தில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். வாகனம் கவிழ்வதற்கு முன்பு அதிக சுமையுடன் இருந்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

இவ்வேளையில், இரு சம்பவங்களிலும் உயி​ரிழந்​தவர்​களின் குடும்​பத்தினருக்கு மாநில முதல்​வர் மோகன் யாதவ் இரங்​கல் தெரி​வித்​துள்​ளார். மேலும், உயி​ரிழந்​தவர்​களின் குடும்​பத்​தினருக்கு தலா ரூ.4 லட்சம் இழப்​பீடு வழங்​கப்​படும் என்​றும் காயமடைந்​தவர்​களுக்குத் தரமான சிகிச்சை வழங்​கப்​படும் என்​றும் அவர் உறுதி அளித்​துள்​ளார்.

இரண்டு சம்பவங்கள் குறித்தும் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக மாவட்ட அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

Mithu

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே