பிரித்தானிய பிரதமரின் ‘தலை’ குறிவைப்பு
பிரித்தானிய பிரதமர் Sir Keir Starmer பதவி விலகுவதற்கான காலக்கெடுவை அறிவிக்க வேண்டும் என கட்சிக்குள்ளேயே கோரிக்கைகள் வலுக்க தொடங்கியுள்ளன.
Makerfield இடைத்தேர்தலில் Andy Burnham அமோக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இந்நிலைமை மேலும் தீவிரமடைந்துள்ளது.
இந்த வெற்றி, லேபர் கட்சிக்குள் (Labour Party) புதிய தலைமைக்கான போட்டியை உக்கிரமடைய வைத்துள்ளது.
குழப்பம், பிளவு ஏற்படுவதை தடுக்கும் நோக்கில், ஆண்டி பர்ன்ஹாமிடம் அதிகாரத்தை ஒப்படைப்பதற்கான திட்டங்களை பிரதமர் அறிவிக்க வேண்டும் என லேபர் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் வலியுறுத்தி வருகின்றனர்.
ஆனால், எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும், பதவியை விட்டு விலகப் போவதில்லை என்றும் பிரதமர் ஸ்டார்மர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
அமைச்சரவையில் பிளவு
பிரதமர் ஸ்டார்மர் , வெள்ளிக்கிழமை மதியம் தனது அமைச்சரவை சகாக்களைத் தொடர்பு கொண்டு தனக்கு இருக்கும் ஆதரவு குறித்துக் கேட்டறிந்தார்.
அப்போது, போக்குவரத்துத் துறைச் செயலாளர் ஹெய்டி அலெக்சாண்டர் (Heidi Alexander), பிரதமர் தனது பதவி விலகலுக்கான காலக்கெடுவை நிர்ணயிப்பது நல்லது என்று ஆலோசனை வழங்கியதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது, தெரியவந்துள்ளது.
அதேநேரம், நிதி செயலாளர் ரேச்சல் ரீவ்ஸ் (Rachel Reeves) பிரதமருக்குத் தனது முழு ஆதரவை தெரிவித்துள்ளார்.
எனினும், கடந்த மாத தேர்தல் தோல்விகளுக்குப் பிறகு உள்துறைச் செயலாளர் ஷபானா மஹ்மூத் மற்றும் எரிசக்தித் துறைச் செயலாளர் எட் மிலிபான்ட் ஆகியோரும் பிரதமர் விலக வேண்டும் என்றே வலியுறுத்தி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வலுத்து வரும் இந்த நெருக்கடிக்கு மத்தியில், வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள வாராந்திர அமைச்சரவைக் கூட்டம் பிரதமருக்கு ஒரு முக்கியமான சோதனைக் கட்டமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.





