இலங்கை செய்தி

கோவிட் தொற்றால் யாழ்ப்பாணத்தில் மீண்டும் மரணம் பதிவானது

கோவிட் தொற்றுக் காரணமாக யாழ்ப்பாணத்தில் மீண்டும் முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தல் சிகிச்சையில் இருந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்தார்.

கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அதற்குரிய தனிமைப்படுத்தல் விடுதியில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் ஒருவர் நேற்றிரவு உயிரிழந்தார்.

யாழ்ப்பாணம் நீர்வேலிப் பகுதியைச் சேர்ந்த முதியவரே உயிரிழந்தார். அவருக்கு  கோவிட் தொற்று ஏற்பட்டிருப்பது ஏப்ரல் 15 ஆம் திகதி உறுதி செய்யப்பட்டது.

அவர் கடுமையான மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்தார். எனினும், தொற்றின் தீவிரம் காரணமாக உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் உடலம் மூடிச் சீல் வைக்கப்பட்டு உறவுகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளதோடு சடலம் வெளியே எடுக்கப்பட்டு சடங்குகள் செய்வதற்கு அனுமதிக்கப்படமாட்டாது என்று தெரிவிக்கப்பட்டது.

கொரோனாப் பெருந்தொற்று பாதிப்பு, தடுப்பூசிகளைத் தொடர்ந்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதன் பின்னர் யாழ்ப்பாணத்தில் கொரோனா அறிகுறியுடன் 5 பேர் இந்த மாதம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

(Visited 2 times, 1 visits today)

priya

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content