இலங்கை செய்தி

கணனி குற்றங்கள் தொடர்பில் 27 பேர் கைது!

கணனி குற்றங்கள் தொடர்பான இந்த வருடத்தின் முதல் இரண்டு மாதங்களில் 677 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸ் தலைமையகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவங்கள் தொடர்பாக வெளிநாட்டவர்கள் உட்பட 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் கணனி குற்ற விசாரணைப்பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும் கடந்த 2022 ஆம் ஆண்டு இணையத்தள குற்றங்கள் குறித்து 3 ஆயிரத்து 400 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதுடன் 25 வெளிநாட்டவர்கள் உட்பட 263 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களுள் 14 பேர் நைஜீரிய பிரஜைகளாகும்.

இதனிடையே உடனடியாக கடன் வழங்குவதாக கூறி வங்கிக்கணக்குகளின் விபரங்கள் மற்றும் தேசிய அடையாள அட்டைகளின் விபரங்களை பெற்று வங்கிக்கணக்குகளில் பணம் மோசடி செய்யப்பட்ட சம்பவங்கள் தொடர்பாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன.

 

(Visited 1 times, 1 visits today)

hinduja

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content