இலங்கை

மனைவியை நிர்வாணமாக்கி மிளகாய் பூசிய கணவன் – இலங்கையில் நடந்த கொடூ

மனைவியை, நிர்வாணமாக்கி கை கால்களைக் கட்டி, மிளகாயை நசுக்கி, அந்தரங்கப் பகுதிக்குள் புகுத்திய கணவனை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பாதுக்க பொலிஸார் தெரிவித்தனர்.

பாதுக்க அங்கம்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தாயொருவர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கணவர் தனது கை, கால்களைக் கட்டி, மிளகாயை நசுக்கி அந்தரங்கப் பகுதியில்  செலுத்தியதாகவும், புழுக்களை எடுத்து உடலில் செருகுவார் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஒரு சந்தர்ப்பத்தில், தனது கணவரும் தனது அந்தரங்கப் பகுதியில் மரக் குச்சியை செலுத்தியதாகவும் அவர் மேலும் கூறுகிறார்.

இந்த மனிதாபிமானமற்ற சித்திரவதை தனது 11 வயது மகளின் கண் முன்னே நடந்ததாகவும், தனது மகளும் மிகவும் சிரமத்தில் இருப்பதாகவும், தனது கைகளில் நான்கு மாத குழந்தையும் இருப்பதாகவும் அந்த பெண் கூறியுள்ளார்.

குறித்த பெண் சிகிச்சைக்காக பாதுக்க மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தற்போது அனுராதபுரத்தில் உள்ள தனது பெற்றோரின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

பாதுக்க காவற்துறையில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் குறித்த பெண்ணிடம் கிராமத்திற்கு செல்வதற்காக பணம் வசூல் செய்து கொடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேக நபரின் கணவர் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாகவும் அவரைக் கைது செய்ய பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் பாதுக்க பொலிஸார் தெரிவித்தனர்.

(Visited 4 times, 1 visits today)

hinduja

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content