“மிகவும் வலிக்கிறது” – தேர்தல் தோல்வி குறித்து ஸ்டார்மர் கருத்து
தொழிற்கட்சி பிரமுகர்கள் சிலர் மக்கள் தங்களுக்கு வாக்களிக்க மறுத்துவிட்டதாக தெரிவித்த தகவல்களுக்கு பிரதமர் பதிலளித்துள்ளார்.
தேர்தல் முடிவுகள் கடினமானவை என்றும், “நிச்சயமாக இது வலிக்கிறது” என்றும் அவர் கூறினார். இருப்பினும், முன்னோக்கி செல்லும் பாதையை வகுப்பதே முக்கியமானது எனவும் அவர் வலியுறுத்தினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், சில தவறுகள் நடந்துள்ளதை ஒப்புக்கொண்டார். குறிப்பாக, நாடு எதிர்கொள்ளும் நிதி மற்றும் சர்வதேச சவால்களைப் பற்றி மக்களிடம் வெளிப்படையாக பேசப்பட்டாலும், அந்த மாற்றங்கள் அவர்களின் வாழ்க்கையை எப்படி மேம்படுத்தும் என்பதை நம்ப வைக்க போதுமான முயற்சி செய்யப்படவில்லை என்று தெரிவித்தார்.
“அரசாங்கத்தின் முதல் இரண்டு ஆண்டுகளில் போதுமான நம்பிக்கை உருவாக்கப்படவில்லை” என்றும் அவர் கூறினார்.
மேலும், பிரித்தானியாவின் இளைஞர்கள் முன்னேறுவதற்கான வாய்ப்புகளை உருவாக்குவது மற்றும் மக்கள் தங்கள் வாழும், வேலை செய்யும் இடங்களைப் பற்றி பெருமை கொள்வதை உறுதி செய்வதில் நம்பிக்கை உள்ளது எனவும் ஸ்டார்மர் கூறினார்.





