உலகம் செய்தி

லெபனானில் இஸ்ரேலிய தாக்குதலில் தொலைக்காட்சி தொகுப்பாளர் ஒருவர் மரணம்

TV presenter killed in Israeli attack in Lebanon

நாட்டின் தெற்கில் இஸ்ரேலிய(Israel) தாக்குதலில் அல்-மனார்(Al-Manar) தொலைக்காட்சி நிலையத்தில் பணிபுரியும் தொகுப்பாளர் அலி நூர் அல்-தின்(Ali Nour al-Din) என்பவர் கொல்லப்பட்டுள்ளதாக லெபனான்(Lebanon) ஆயுதக் குழுவான ஹெஸ்பொல்லா(Hezbollah) தெரிவித்துள்ளது.

மரணத்தை உறுதிப்படுத்திய லெபனானின் தகவல் அமைச்சர் பால் மோர்கோஸ்(Paul Morgos), அலி நூர் எல்-தின் கொல்லப்பட்டதைக் கண்டித்து இந்தத் தாக்குதல் இஸ்ரேலின் சர்வதேச சட்ட மீறல்களின் ஒரு பகுதி என்று குறிப்பிட்டுள்ளார்.

அலி நூர் அல்-தின் ஒரு ஹெஸ்பொல்லா போராளி என்றும் அவர் சமீபத்தில் தெற்கு லெபனானில் குழுவின் பீரங்கித் திறன்களை மறுசீரமைக்கப் பணியாற்றினார் என்றும் இஸ்ரேலிய இராணுவம் தாக்குதலுக்கு பிறகு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், அலி நூர் அல்-தின் கொல்லப்படுவதற்கு முன்பு, 2023 முதல் லெபனான் மீதான இஸ்ரேலிய தாக்குதல்களில் குறைந்தது ஆறு லெபனான் பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று பத்திரிகையாளர்களைப் பாதுகாக்கும் குழு தெரிவித்துள்ளது.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி