ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதில் சிக்கல் – நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் கொசோவா!
கொசோவோ மூன்றாவது நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராகி வருகிறது.
நாடாளுமன்றம் நேற்று கலைக்கப்பட்டதை தொடர்ந்து புதிய தேர்தல் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வியோசா ஒஸ்மானிக்கு (Vjosa Osmani) தேவையான ஆதரவாளர்கள் அல்லது போதுமான பெரும்பான்மையை பெற முடியாததன் காரணமாக நாடாளுமன்றம் தானாகவே கலைந்தது.
இதுனையடுத்து அடுத்துவரும் 45 நாட்களுக்குள் புதிய தேர்தல் இடம்பெற்று உறுப்பினர் தெரிவு செய்யப்பட வேண்டும்.
மேலும், ஐரோப்பிய ஒன்றிய உறுப்புரிமைக்காக செர்பியாவுடனான உறவுகளைச் சரிசெய்ய நாடு முயன்று வரும் நிலையில், அரசியல் நிச்சயமற்ற தன்மை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




