இலங்கை

திருகோணமலை – 2022ம் ஆண்டு பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்களுக்கான நிதியுதவி வழங்கும் நிகழ்வு

திருகோணமலை மாவட்டத்தில் இருந்து 2022 ம் ஆண்டு பல்கலைக்கழகத்திற்கு தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களுக்கான நிதியுதவி வழங்கும் நிகழ்வு இன்று (30) நகர சபை மண்டபத்தில் இடம்பெற்றது.

திருகோணமலை மாவட்ட நலன்புரிச்சங்கத்தின் தலைவர் எஸ். குகதாசன் தலைமையில் இந்நிகழ்வு இடம் பெற்றது.

கணிதம்,உயிரியல் விஞ்ஞான,பொறியியல் தொழில்நுட்ப ,விஞ்ஞான தொழில்நுட்ப, கலை மற்றும் வர்த்தக பிரிவுகளில் மாவட்ட மட்டத்தில் முதலாம் இடங்களைப்பெற்ற மூவின மாணவர்கள் ஆறு பேருக்கும்,2021 ம் ஆண்டு இவ் மாவட்டத்தில் இருந்து பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட 41 மாணவர்களுக்கும் , நிலைகளைப்பெற்ற மாணவர்களுக்கு தலா ரூபா.25,000/00 நிதி கொடுப்பனவு வழங்கப்பட்டது

2021 ம் ஆண்டு பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட 41 மாணவர்களின் கற்கை நெறி நிறைவடையும் வரை மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை ஒவ்வொரு மாணவர்களுக்கும் தலா ரூபா 25000/00 தொடர்ச்சியாக வழங்கப்படவுள்ளது என சங்கத்தின் தலைவர் எஸ்.குகதாசன் தெரிவித்தார்.

 

(Visited 4 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content