இலங்கையில் கிரிக்கெட் போட்டியின்போது சோகம் – பந்தை பிடிக்க முயன்ற வீரர் பலி
catching cricket ball
மினுவாங்கொடை, அலுதபொல பொது மைதானத்தில் நடைபெற்ற மென்பந்து கிரிக்கெட் போட்டியின் போது ஏற்பட்ட விபத்தில் ஒரு வீரர் உயிரிழந்துள்ளார்.
நேற்று பிற்பகல் 3:00 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பந்தைப் பிடிக்க முயன்றபோது இரண்டு வீரர்கள் மோதிக்கொண்டதில் இந்த விபத்து நிகழ்ந்ததாகத் தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவர் பலுகஹவெல, கட்டுவெல்லேகம பகுதியைச் சேர்ந்த தனுஷ்க தேவிந்த பெரேரா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
விபத்துக்குப் பிறகு அவர் உடனடியாக மினுவாங்கொடை அடிப்படை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும், அங்கு சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக கம்பஹா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தில் மற்ற வீரர் காயமடையவில்லை என்று மினுவாங்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.





