மலையகத்தில் 100 அடி பள்ளத்தில் விழுந்த முச்சக்கரவண்டி!!
கட்டுநாயக்காவில் இருந்த லிந்துல நோக்கிச் சென்ற முச்சக்கரவண்டியான்று 100 அடி பள்ளத்தில் பாய்ந்து நேற்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
ஹட்டன்-கொழும்பு பிரதான சாலையில் உள்ள கரோலினா எஸ்டேட் பகுதியில் இவ்விபத்து நேர்ந்ததாக தெரியவந்துள்ளது.
காயமடைந்த ஓட்டுநர் சிகிச்சைக்காக வட்டவல பிரதேச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதேநேரம் சாரதிக்கு ஏற்பட்ட நித்திரையே விபத்துக்கு காரணம் என பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.





