ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவில் நடந்த சாலை விபத்தில் மூவர் மரணம் – 37 வயது பெண் கைது

Three killed in road accident in Britain – 37-year-old woman arrested

பிரித்தானியாவின்(England) லெய்செஸ்டர்ஷையர்(Leicestershire) பகுதியில் உள்ள A46 பாதையில் நடந்த வாகன விபத்தில் மூன்று பேர் உயிரிழந்ததை அடுத்து ஒரு பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

5 பேர் பயணித்த நீல நிற BMW வாகனம், நாட்டிங்ஹாமில்(Nottingham) இருந்து தெற்கு நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது சாலையை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியதாக லெய்செஸ்டர்ஷயர் காவல்துறை தெரிவித்துள்ளது.

ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டியதன் மூலம் மரணத்தை ஏற்படுத்தியதாக சந்தேகத்தின் பேரில் 37 வயது பெண் ஒருவர் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

காரில் இருந்த நான்காவது நபர், சிறிய காயங்களுடன் விபத்து குறித்து தகவல் அளித்ததாக லெய்செஸ்டர்ஷயர் காவல்துறை தெரிவித்துள்ளது.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி