ஐரோப்பா

ஜெர்மனியில் தாயை கொடூரமாக கொலை செய்த மகன்

ஜெர்மனியில் டியுஸ் பேர்க் நகரத்தில் மீண்டும் ஒரு கத்தி குத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

ஜெர்மனியில் டியுஸ் பேர்க் நகரத்தில் வீடு ஒன்றில் இருந்து பெண் ஒருவர் கத்தி குத்து காயங்களுடன் வீதிக்க ஓடி வந்துள்ளார்.

அதாவது 53 வயதுடைய பெண் ஒருவர் அவரது வீட்டில் வைத்து கத்தியால் குத்தப்பட்டுள்ளார்.

பின் குறித்த பெண் கத்தி குத்து காயத்துடன் இரத்தம் வெளியேறிய நிலையில் வீட்டை விட்டு வெளியே வந்துள்ள நிலையில் வீதியில் வைத்து அவர் உயிரிழந்துள்ளதாக தெரிய வந்திருக்கின்றது.

இந்த கொலை சம்பவத்துடன் தொடர்புடைய குறித்த பெண்ணின் 29 வயதுடைய மகனை பொலிஸார் தேடி வருவதாக தெரிய வந்திருக்கின்றது.

இவர் ஏற்கனவே மன ரீதியாக பாதிக்கப்பட்டவர் என்பது விசாரணையில் தெரியவந்திருக்கின்றது.

மேலும் இந்த கொலை இடம் பெற்ற தினம் அவர் மனநல வைத்தியசாலையில் நியமனம் ஒன்றை பெற்றிருந்துள்ளார்.

ஆனால் அன்றைய தினம் அந்த வைத்திய சாலைக்கு செல்லவில்லை என்றும் தெரியவந்திருக்கின்றது.

இதன் காரணத்தினால் தற்பொழுது பொலிஸார் 29 வயதுடைய மகனை தேடி வருவதாக தெரியவந்திருக்கின்றது.

(Visited 1 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்

You cannot copy content of this page

Skip to content