இலங்கை

இலங்கையில் அதிர்ச்சி – மனைவிக்கு கணவன் செய்த கொடூரம்

வெல்லம்பிட்டிய பிரதேசத்தில் மனைவியை பெற்றோல் ஊற்றி தீ வைத்து கொலை செய்த சந்தேகத்தில் பெண்ணின் கணவனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தனது மனைவியை சந்தேக நபர் தீ வைத்து எரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த ஏப்ரல் மாதம் 24ஆம் திகதி மேலதிக வகுப்பில் கலந்து கொண்ட தனது மகளை அழைத்து வருவதற்காக செல்லும் வழியில் இரவு 7 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பலத்த தீக்காயங்களுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்த பெண் கடந்த 30ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

வெல்லம்பிட்டிய சேதவத்த பகுதியைச் சேர்ந்த தனுஜா நிலாந்தி என்ற 44 வயதுடைய, இரண்டு பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சந்தேக நபரும் தீக்காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் இருந்த போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குடும்ப தகராறு காரணமாக இந்த கொலை நடந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

(Visited 22 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content