இலங்கை

இலங்கையில் நடந்த அதிர்ச்சி – தாய் உட்பட 3 சிசுக்கள் மரணம் – கடும் கோபத்தில குடும்பத்தினர்

ராகம போதனா வைத்தியசாலையில் இளம் கர்ப்பிணி தாயும், அவரது வயிற்றிலிருந்த மூன்று கருக்களும் உயிரிழந்துள்ளதாக குடும்பத்தினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

வைத்தியர்கள் மற்றும் ஏனைய சுகாதார பிரிவினரின் அலட்சியத்தால் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கிரிபத்கொட, மாகொலவில் பகுதியை சேர்ந்த 36 வயதான லவந்தி ஜயசூரிய என்ற இளம் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த உயர்தர பாடசாலையொன்றில் ஆங்கில ஆசிரியையாக பணிபுரிந்துள்ளார்.

சுமார் 10 ஆண்டுகளாக குழந்தை இல்லாததால், தனியார் மருத்துவமனையொன்றில் குறித்த பெண்ணுக்கு குழாய் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், மூன்று குழந்தைகளை கருவில் சுமந்துள்ளார்.

இதனையடுத்து இவர் 6 மாத கர்ப்பிணியாக இருந்தார். இந்த நிலையில், ​​கர்ப்ப காலத்தில் ஏற்பட்ட அதிக இரத்தப்போக்கு காரணமாக தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில், ராகம போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதன்போது வைத்தியசாலையில் ஏற்பட்ட அலட்சியத்தினால் கருவொன்று தரையில் விழுந்து உயிரிழந்த பின்னரே வைத்திய அதிகாரிகள் கவனம் செலுத்தியதாக உயிரிழந்த பெண்ணின் தாய் குற்றம்சாட்டியுள்ளார்.

இதனையடுத்து வயிற்றிலிருந்த ஏனைய இரண்டு கருக்களும் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளதுடன், இளம் தாயும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், வைத்தியசாலை அதிகாரிகளின் அலட்சியத்தால் தான் தனது மகளையும்,மூன்று பேரப்பிள்ளைகளையும் இழந்துள்ளதாகவும், சிசுக்களை இதுவரை குடும்பத்தினரிடம் காண்பிக்கவில்லையெனவும் லவந்தியின் தாய் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்நிலையில், உயிரிழந்த பெண்ணின் சடலத்தின் மீதான இறுதிக் கிரியைகள் நேற்று பமுனுவில பொது மயானத்தில் இடம்பெற்றுள்ளன.

(Visited 4 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content