இலங்கை

நாட்டின் தற்போதைய நிலைமை கவலைக்குரியது – சந்திம வீரக்கொடி

நாட்டின் தற்போதைய நிலைமை கவலைக்குரியது என பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் எதிர்க்கட்சியின் உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று  (24) இடம்பெற்ற பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவை பதவி நீக்குவதற்கான பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர்  மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்து தெரிவித்த அவர்,  நாட்டின் தற்போதைய நிலையையிட்டு கவலையடைய வேண்டும்.ஒரு தரப்பினரின் நோக்கத்துக்கு அமைய செயற்படாத காரணத்தால் சுயாதீன ஆணைக்குழுக்களின் சுயாதீன தன்மை கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவே ஜனக ரத்நாயக்கவை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவராக நியமித்தார்.

ஜனக ரத்நாயக்கவின் தகைமையை தொடர்பில் கேள்வியெழுப்பும் தரப்பினர் ஏன் ஆரம்பத்தில் அது தொடர்பில் அவதானம் செலுத்தவில்லை.

நாட்டு மக்களின் ஜனநாயகத்தை இல்லாதொழிப்பதற்காகவே ஒரு சில ஆணைக்குழுக்களுக்கு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவை சிறந்த உதாரணமாக குறிப்பிட வேண்டும்.தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினர் சார்ள்ஸ் தேர்தலை பிற்போடும் அரசாங்கத்தின் நோக்கத்துக்கு சார்பாகவே செயற்பட்டார் எனத் தெரிவித்துள்ளார்.

(Visited 2 times, 1 visits today)

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content