உலகம் செய்தி

2030ஆம் ஆண்டிற்குள் உலக மின்சாரத்தில் ஏற்படவுள்ள மாற்றம்!

உலகளவில் 2030ஆம் ஆண்டிற்குள் மின்சாரத்தில் மாற்றம் ஏற்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உலகளவில் சுமார் 50 சதவீதம் குறைவான கரியமில வாயுவை வெளியேற்றக்கூடியதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பசுமை எரிசக்தித் திட்டங்களுக்கு ஆண்டுக்கு சுமார் 2 டிரில்லியன் டொலர் முதலீடு செய்யப்படுகிறது.

படிம எரிபொருள் திட்டங்களுக்கான முதலீட்டைப் போல் அது இரண்டு மடங்கு என்று அனைத்துலக எரிசக்தி அமைப்பு குறிப்பிட்டுள்ளது. 2023ஆம் ஆண்டு இதுவரை இல்லாத அளவில் பசுமை எரிசக்தி வளங்கள் அதிகரித்ததாக அது கூறியது.

2030ஆம் ஆண்டிற்குள் படிம எரிபொருளின் இருப்பு அதன் தேவையைவிட அதிகமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

எனினும் உலகில் குறிப்பிட்ட இடங்களில் எண்ணெய், எரிவாயு, கரி ஆகியவற்றுக்கான தேவை இன்னும் குறையவில்லை.

2030ஆம் ஆண்டில் அவற்றின் தேவை உச்சத்தை எட்டி, குறையத் தொடங்கிவிடும் என்று அனைத்துலக எரிசக்தி அமைப்பு நம்புகிறது.

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி