ஆப்பிரிக்கா செய்தி

நைஜர் நாட்டை கைப்பற்றியது இராணுவம்

நைஜர் அரசாங்கத்தை இராணுவம் கைப்பற்றியுள்ளது.

நைஜர் ஜனாதிபதி மொஹமட் பாஸூம் இராணுவத்தால் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஜனாதிபதி மாளிகை உள்ளிட்ட அரச நிறுவனங்களுக்கு முற்றாக சீல் வைக்க இராணுவம் நடவடிக்கை எடுத்துள்ளது.

நைஜர் நாட்டின் கர்னல் மேஜர் அமடு அப்த்ரமனே உட்பட 9 இராணுவத் தலைவர்கள் அடங்கிய குழு, அரசு தொலைக்காட்சியில் மக்களிடம் உரையாற்றி, ஜனாதிபதி தலைமையிலான ஆட்சி முடிவுக்கு வந்ததாக அறிவித்தது.

மறு அறிவித்தல் வரை எல்லைகள் மூடப்பட்டு ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் என இராணுவத் தளபதிகள் அறிவித்துள்ளனர்.

நாட்டில் தொடர்ந்தும் பாதுகாப்பு சீர்குலைவு, பலவீனமான பொருளாதார மற்றும் சமூக நிர்வாகத்தை கருத்தில் கொண்டு ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர ஜனாதிபதி தீர்மானித்ததாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி