ஆசியா உலகம் செய்தி

தென்சீனக் கடல்பரப்பில் பதற்றம் : சீனாவை எச்சரிக்கும் அமெரிக்கா!

தென் சீனக்கடல் பகுதியில் சீனா ஆதிக்கம் செலுத்த முயற்சி செய்து வருகிறது. இதற்கு எதிராக மலேசியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம் உள்ளிட்ட நாடுகள் உள்ளன.

இவ்விவகாரத்தில் சீனா-அமெரிக்கா இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு இருந்து வருகிறது. சீனாவுக்கு எதிராக உள்ள நாடுகளுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்து வருகிறது.

இதற்கிடையே தென் சீன கடல் பகுதியில் பிலிப்பைன்ஸ் எல்லை அருகே சீன கப்பல் ரோந்து பணியில் ஈடுபட்டது. அங்கு பிலிப்பைன்ஸ் கடற்படை கப்பலும் ரோந்து சென்றது.

அப்போது 2 கப்பலும் மோதுவதுபோல் அருகருகே வந்தது. பிலிப்பைன்ஸ் கப்பல் பின்வாங்கியதால் மோதல் தவிர்க்கப்பட்டது. இது தென் சீன கடல் பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த நிலையில் சீனாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. சர்ச்சைக்குரிய தென் சீன கடலில் ஆத்திரமூட்டும் மற்றும் பாதுகாப்பற்ற செயலை சீனா நிறுத்த வேண்டும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் கூறும்போது சீனா அதன் ஆத்திரமூட்டும் மற்றும் பாதுகாப்பற்ற நடத்தையில் இருந்து விலகுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

பிலிப்பைன்ஸ் ஆயுதப்படைகள் மீதான எந்தவொரு தாக்குதலும் அமெரிக்காவை பதிலடிக்கு தூண்டும் என்றார். சீனா தனது கடல் எல்லையை தாண்டி வந்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

(Visited 10 times, 1 visits today)

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content