தேர்தலில் மக்கள் தங்களின் கோபத்தை தீர்ப்பாக வெளிப்படுத்தியுள்ளார்கள்- அன்புமணி அறிக்கை
திமுக ஆட்சியை அகற்றுவதற்காக மக்கள் திரண்டு வந்து வாக்களித்துள்ளதாக தெரிவித்த பாமக தலைவர் அன்புமணி தேர்தலில் மக்கள் தங்களின் கோபத்தை தீர்ப்பாக வெளிப்படுத்தியுள்ளதாகவும் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் 85.12% வாக்குகள் பதிவாகியிருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது. தமிழ்நாட்டில் தேர்தல் வரலாற்றில் இந்த அளவு வாக்குகள் பதிவாகியிருப்பது இதுவே முதன் முறையாகும். தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு எதிராக மக்கள் பெரும் கொந்தளிப்பில் இருந்தனர், திமுக ஆட்சியை அகற்றுவதற்காக திரண்டு வந்து […]




