மனித தலையீடுகள் இல்லாத தானியங்கி ஆயுதங்கள் குறித்து அவசர எச்சரிக்கை
எதிர்காலத்தில் மனிதத் தலையீடு இல்லாமல் மக்களைக் கொல்லக்கூடிய தானியங்கி ஆயுதங்கள் விரைவில் மோதல்களில் பயன்படுத்தப்படலாம் என்று செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் தலைவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அத்துடன் அவற்றின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த அவசரப் பேச்சுவார்த்தைகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளனர். ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவர் மிர்ஜானா ஸ்போல்ஜாரிக் ஆகியோர் இன்று வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில், “இயந்திரங்கள் மூலம் மனிதர்களைத் தானாகவே […]





