ஈரான் மக்களுக்காக நடத்தப்பட்ட ஏலம்: 1 முட்டை 25 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனை!
போரால் பாதிக்கப்பட்டுள்ள ஈரான் மக்களுக்கு உதவுவதற்காக நடத்தப்பட்ட ஏலத்தில் முட்டையொன்று இந்திய நாணய பெறுமதியின் 25 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்தியா, லடாக் யூனியன் பிரதேசத்தின் லே மாவட்டத்திலேயே குறித்த ஏலம் நடத்தப்பட்டுள்ளது. அஞ்சுமன் இமாமியா லே மற்றும் மஜ்லிஸ்-ஏ-உலமா லே உள்ளிட்ட உள்ளூர் அமைப்புகள் இதற்குரிய நடவடிக்கையை முன்னெடுத்துவருகின்றன. இதற்கமைய நடைபெற்ற ஒரு ஏலத்தில் முட்டையொன்று 25 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனையானது. அந்த முட்டையை ஏலத்தில் வாங்கிய ஷபீர் உசேன், அது தொடர்பில் கருத்து […]













