வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம்: தமிழரசுக் கட்சி எடுத்துள்ள அதிர்ச்சி முடிவு
இலங்கையில் இம்முறை நடைபெறும் சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான தின நிகழ்வுகளில் இலங்கைக் தமிழரசுக் கட்சி கலந்துகொள்வதில்லை என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இது தொடர்பில் இலங்கைக் தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானம் மற்றும் பொதுச்செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோரின் கையொப்பங்களுடன் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:- “ஒவ்வொரு வருடமும் ஓகஸ்ட் 30 ஆம் திகதி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச தினமாக அனுஷ்டிக்கப்படுகின்றது. எமது நாட்டில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு இன்னமும் எந்தவிதமான நீதியும் கிடைக்கவில்லை. […]













