சுவிஸ் தூதரக சந்திப்பை குழப்பியது யார்? கஜேந்திரகுமார் விளக்கம்!
சுவிட்சர்லாந்து தூதரகத்தின் ஏற்பாட்டில் நடத்தப்படவிருந்த சந்திப்புக்கு தமது கட்சியே இடையூறு விளைவித்ததாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் Gajendrakumar Ponnambalam நிராகரித்துள்ளார். யாழிலுள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனை நிராகரித்தார். “தமிழ் தேசியப் பேரவையின் அழைப்பின் பேரில் எதிர்வரும் 15ஆம் திகதி சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. வடக்கு கிழக்கை மையப்படுத்திய சிவில் சமூக அமைப்புகள் மற்றும் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் தேசியக் கட்சிகளுக்கும் […]













