இலங்கை செய்தி

மூன்று வயது சிறுமியை பலியெடுத்த கோர விபத்து!

  • February 21, 2026
  • 0 Comments

கண்டி ​​Kandy மாவட்டம், கம்பளை Gampola பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூன்று வயது சிறுமியொருவர் பலியாகியுள்ளார். மேலும் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர். கம்பளை, நாவலப்பிட்டி பிரதான வீதியின் நாகொல்ல Nagolla பகுதியில் வைத்தே நேற்று மாலை இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. கம்பளை நோக்கிப் பயணித்த காரொன்று, பஸ்ஸை முந்திச் செல்ல முயன்றபோது, எதிர்த்திசையில் வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. இதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த தாய் மற்றும் அவரது இரு படுகாயமடைந்த நிலையில் கம்பளை வைத்தியசாலையில் […]

இலங்கை செய்தி

” கொழும்பு துறைமுகத்தில் அமெரிக்க கட்டளைத் தளபதி”

  • February 20, 2026
  • 0 Comments

இலங்கைக்குபயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்காவின் பசுபிக் கட்டளைப் பீடத் தளபதி அட்மிரல் ஸ்டீவ் கோஹ்லர் (Admiral Steve Koehler) இன்று கொழும்பு துறைமுகத்துக்கு சென்றிருந்தார். கடல்சார் பாதுகாப்பினை பலப்படுத்துவதற்கான வாய்ப்புகளை ஆராய்வதற்காகவே அவர் அங்கு சென்றிருந்தார். இது தொடர்பில் இலங்கைக்கான அமெரிக்க தூதுரகத்தின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவு வருமாறு, ” அமெரிக்காவிற்கும் இலங்கைக்குமிடையிலான பாதுகாப்பு உறவானது பாதுகாப்பை மட்டுமன்றி வேறு பல விடயங்களையும் பலப்படுத்துகிறது. அது எமது இரு நாடுகளதும் பொருளாதாரப் பாதுகாப்பிற்கும் உதவுகிறது. கடல்சார் […]

இந்தியா தமிழ்நாடு

மீண்டும் வெல்வோம்: தி.மு.க. ஆட்சி தொடரும் ! தமிழக முதல்வர் சூளுரை!

  • February 20, 2026
  • 0 Comments

“ சட்டப் பேரவை தேர்தலில் மீண்டும் வெல்வோம். மீண்டும் வந்து DMK ஆட்சி அமைப்போம். தமிழ் மக்களுக்கான திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்துவோம்’’ இவ்வாறு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் M.K. Stalin சூளுரைத்துள்ளார். தமிழ்நாடு சட்டப் பேரவையின் எட்டாவது கூட்டத் தொடரின் நிறைவு நாளான இன்று உரையாற்றுகையிலேயே முதல்வர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். “எனக்குத் தரப்பட்ட பொறுப்பை மிகச்சிறப்பாகச் செய்தாகவே நான் நினைக்கிறேன். இந்த 5 ஆண்டுகளில் பெற்ற அனுபவத்தினால் இன்னும் வலிமை பெற்று, தமிழ்நாட்டை இன்னும் ஏற்றம் […]

இலங்கை செய்தி

டெல்லி, கொழும்பு உறவை மேலும் வலுப்படுத்த இணக்கம்!

  • February 20, 2026
  • 0 Comments

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான சந்திப்பு இன்று (20) நண்பகல் புதுடில்லியில் உள்ள ஹைதராபாத் மாளிகையில் (Hyderabad House) இடம்பெற்றது. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை மிகுந்த நட்புடன் வரவேற்ற இந்தியப் பிரதமர், தனது அழைப்பை ஏற்று AI Impact 2026 மாநாட்டில் பங்கேற்றதற்கு நன்றிகளைத் தெரிவித்ததுடன், சுமூகமான கலந்துரையாடலிலும் ஈடுபட்டார். இதனைத் தொடர்ந்து இரு தலைவர்களும் இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் இணைந்துகொண்டனர். இதன்போது இலங்கை – இந்திய இடையிலான வரலாற்று […]

அரசியல் இலங்கை செய்தி

பொன்சேகா வெத்து வேட்டு: மஹிந்த அணி கொதிப்பு!

  • February 20, 2026
  • 0 Comments

“ முன்னாள் இராணுவத் தளபதி சரத்பொன்சேகா Sarath Fonseka கூறும் கருத்துகள் தொடர்பில் அலட்டிக்கொள்ள வேண்டியதில்லை.” என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி SLPP தெரிவித்துள்ளது. மக்களுக்காக அரசியல் செய்யும் நபர் அவர் அல்லர் எனவும், பகைமை அரசியலையே முன்னெடுத்துவருகின்றார் எனவும் அக்கட்சி விமர்சித்துள்ளது. இறுதிப்போரின்போது புலிகள் சரணடைவதற்கு மஹிந்த ராஜபக்ச சந்தர்ப்பமளித்தார் என பொன்சேகா குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். மூன்றாம் தரப்பிடம் சரணடைவதே புலிகளின் கோரிக்கையாக இருந்தது. எனினும், இராணுவத்தினரிடம் சரணடைய சொன்னதால் அத்திட்டம் தோல்வி அடைந்தது […]

அரசியல் இலங்கை செய்தி

மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு மஹிந்த அணி மீண்டும் அழுத்தம்!

  • February 20, 2026
  • 0 Comments

மாகாணசபைத் தேர்தலை விரைவில் நடத்துமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன SLPP கட்சி மீண்டும் வலியுறுத்தியுள்ளது. கொழும்பில் இன்று (20) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அக்கட்சியின் உறுப்பினரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி issa Kuttiarachchi இந்த வலியுறுத்தலை விடுத்தார். “ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரித்துவருகின்றது. எனவே, மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்துக்கு சவால் விடுக்கின்றோம். மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட்டால் அதில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி நிச்சயம் வெற்றிபெறும்.” – […]

இலங்கை செய்தி

வடக்கில் முதலீடு செய்யுமாறு இந்திய முதலீட்டாளர்களுக்கு அழைப்பு!

  • February 20, 2026
  • 0 Comments

இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் வடக்கு மாகாணத்தில் மிகப்பெரிய அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில், அதற்காக இந்திய அரசாங்கத்துக்கும் மக்களுக்கும் வடக்கு மாகாண மக்கள் சார்பில் ஆளுநர் நா.வேதநாயகன் தமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பிரதி உயர்ஸ்தானிகர் சத்யஞ்சல் பாண்டே வடக்கு மாகாண ஆளுநரை இன்று வெள்ளிக்கிழமை (20.02.2026) காலை ஆளுநர் செயலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினர். யாழ்ப்பாணத்திலுள்ள  இந்தியத் துணைத்தூதரகத்தின் கொன்சியூலர் ஜெனரல் சாய்முரளியும் இச்சந்திப்பில் பங்கேற்றார். இச்சந்திப்பின்போது, […]

விளையாட்டு

சூப்பர் 8 சுற்று நாளை ஆரம்பம்: போட்டிகள் தொடர்பான முழு விபரம்…!

  • February 20, 2026
  • 0 Comments

T20 World Cup உலகக்கிண்ண தொடரில் மிக முக்கிய சுற்றான சூப்பர் 8 super 8 சுற்று நாளை (21) ஆரம்பமாகின்றது. இதற்கமைய சூப்பர் 8 சுற்றில் முதலாவது போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இலங்கை நேரப்படி இரவு 7 மணிக்கு போட்டி ஆரம்பமாகும். 22 ஆம் திகதி இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. கண்டி பல்லேகல மைதானத்தில் முற்பகல் 3 மணிக்கு இப்போட்டி ஆரம்பமாகும். அன்றைய […]

இலங்கை செய்தி

மாகாணசபைத் தேர்தல் குறித்து ஆராய விஜித ஹேரத் தலைமையில் விசேட குழு நியமனம்!

  • February 20, 2026
  • 0 Comments

மாகாணசபைத் தேர்தலை எந்தமுறைமையின்கீழ் நடத்த வேண்டும் என்பது தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட விசேட நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்குரிய Special Parliamentary Select Committee உறுப்பினர்கள் பெயரிடப்பட்டுள்ளனர். நாடாளுமன்றம் இன்று (20) முற்பகல் 9.30 மணிக்கு சபாநாயகர் தலைமையில் கூடியது. இதன்போதே மேற்படி குழுவுக்குரிய உறுப்பினர்களின் பெயர் விபரங்களை சபாநாயகர் அறிவித்தார். மேற்படி விசேட நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் தலைவராக அமைச்சர் விஜித ஹேரத் Vijith Herath நியமிக்கப்பட்டுள்ளார். பிரதி அமைச்சர்களான முனீர் முலபர், சுனில் வட்டகல, அருண் ஹேமசந்திரா ஆகியோரும், […]

இலங்கை செய்தி

புலம்பெயர் தமிழர்கள் போர்க்கொடி: நாமலின் பிரிட்டன் உரை இரத்து!

  • February 20, 2026
  • 0 Comments

புலம்பெயர் தமிழர்களின் கடும் எதிர்ப்பு காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, பிரிட்டனில் ஆற்றவிருந்த உரை இரத்து செய்யப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் Mahinda Rajapaksa மகனான நாமல் ராஜபக்ச Namal Rajapaksa , ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் SLPP தேசிய அமைப்பாளராக பதவி வகிக்கின்றார். மாத இறுதியில் ஒக்ஸ்போர்ட் யூனியன் Oxford Union மற்றும் கேம்பிரிட்ஜ் யூனியன் Cambridge Union ஆகியவற்றில் உரையாற்றுவதற்கு நாமல் ராஜபக்ச பிரிட்டன் செல்வதற்கு ஏற்பாடு நடைபெற்றுவந்தது. எனினும், மேற்படி […]

error: Content is protected !!