காணாமல் ஆக்கப்பட்ட ஊடகருக்கு நீதிகோரி யாழில் போராட்டம்!
“இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுக் காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர் சுப்பிரமணியம் இராமச்சந்திரன் எங்கே? அநுர அரசே இதற்குப் பதில் சொல்!” இவ்வாறு வலியுறுத்தி யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தின் ஏற்பாட்டில் பருத்தித்துறையில் இன்று சனிக்கிழமை கவனவீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. வடமராட்சி – கரவெட்டியைச் சேர்ந்த ஆசிரியரும் ஊடகவியலாளருமான சு.இராமச்சந்திரன், கடந்த 15.02.2007 அன்று பணி முடிந்து வீடு திரும்பிய போது, துன்னாலை கலிகைச் சந்தி இராணுவ முகாமில் வைத்து இராணுவத்தினராலும் ஈ.பி.டி.பியினராலும் கைது செய்யப்பட்டுக் காணாமலாக்கப்பட்டார். இச்சம்பவம் இடம்பெற்று 19 […]













