ரோஹிங்கியா அகதிகள் முகாமில் நிலச்சரிவு – குழந்தைகள் பலர் பலி
வங்கதேசத்தில் உள்ள ரோஹிங்கியா அகதிகள் முகாமில் இன்று பெய்த கனமழையினால் மதராஸா பாடசாலையொன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்துள்ளது. இதில் எட்டு குழந்தைகள் உயிரிழந்ததுடன், ஐந்து பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதேநேரம் குறித்த பாடசாலையில் இருந்து 13 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்கள் சிகிச்சைக்காக முகாம்களில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த வார தொடக்கத்தில், மழையால் ஏற்பட்ட தனித்தனி நிலச்சரிவுகளில், முகாம்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட எட்டு ரோஹிங்கியா அகதிகள் உயிரிழந்ததைத் தொடர்ந்து இந்தக் கோரச் […]



