உலகம் செய்தி

மீண்டும் பதற்றம்: தெற்கு ஈரானில் அமெரிக்கா தாக்குதல்!

  • May 26, 2026
  • 0 Comments

தெற்கு ஈரானில் உள்ள ஏவுகணை தளங்கள் மற்றும் கடலில் கண்ணிவெடிகளை வைக்க முயன்ற ஈரானிய படகுகளைக் குறிவைத்து புதிய வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது. தற்காலிக போர் நிறுத்தம் அமுலில் உள்ள நிலையிலேயே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது குறித்து அமெரிக்க மத்திய கட்டளையகம் (US Central Command) வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஈரானியப் படைகளால் எங்கள் படைகளுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களிலிருந்து அவர்களைப் பாதுகாப்பதற்காக, ‘தற்காப்பு’ நடவடிக்கையாகவே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன” என்று கூறப்பட்டுள்ளது. தெற்குத் துறைமுக […]

ஆஸ்திரேலியா செய்தி

ஆஸ்திரேலியாவின் புதிய ஏவுகணைத் திட்டம்!

  • May 26, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியாவின் தற்காப்புத் திறனை மேம்படுத்தும் முக்கிய நகர்வாக, மேற்கு ஆஸ்திரேலியாவில் (Western Australia ) அதிநவீன ஏவுகணைகள் மற்றும் ஆயுதங்கள் தயாரிப்பதற்கான பிரமாண்ட உற்பத்தி நிலையத்தை நிறுவுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு காண்பதற்கும், இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் மாறிவரும் புவிசார் அரசியல் சூழல்களை எதிர்கொள்வதற்கும் இந்த ஆயுத உற்பத்தி மையம் முக்கியப் பங்காற்றும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா தனது இராணுவத் தேவைகளுக்காகவும் தற்காப்புப் படைகளுக்காகவும் (ADF) வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஏவுகணைகள் மற்றும் வெடிமருந்துகளைச் சார்ந்திருப்பதை […]

செய்தி

அரசின் ஆயுள் முடியப்போகிறது: கொக்கரிக்கிறார் விமல்!

  • May 26, 2026
  • 0 Comments

“தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஆயுள் காலம் குறைவடைய ஆரம்பித்துள்ளது என்பதையே தற்போது நடக்கும் சம்பவங்கள் புலப்படுத்துகின்றன.” என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார். தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச நேற்று கைது செய்யப்பட்டிருந்தார். நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட பின்னர் அவருக்கு பிணை வழங்கப்பட்டது. அதன்பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே விமல்வீரவன்ச மேற்கண்டவாறு கூறினார். “மே மாதம் கைதட்டுவதற்கு தயாராக இருக்குமாறு மே தினக் கூட்டத்தில் உரையாற்றும்போது ஜனாதிபதி […]

செய்தி விளையாட்டு

இறுதிப் போட்டிக்குள் நுழையும் அணி எது? இன்று பலப்பரீட்சை!

  • May 26, 2026
  • 0 Comments

IPL 2026 கிரிக்கெட் திருவிழா இறுதிக்கட்டத்துக்கு வந்து விட்டது. இன்று Play – off சுற்று ஆரம்பமாகின்றது. புள்ளிப்பட்டியலில் முதலிரண்டு இடங்களை பெற்ற அணிகளான பெங்களூரு ராயல் சேலஞ்சர்சும் , குஜராத் டைட்டன்சும் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் இன்று மோதுகின்றன. இமாசலபிரதேச மாநிலம் தர்மசாலாவில் இப்போட்டி இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகும். இப்போட்டியில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்குள் நுழையும். தோல்வி அடையும் அணிக்கு இன்னொரு வாய்ப்பு வழங்கப்படும். அதாவது வெளியேற்றுதல் (Eliminator) சுற்றில் […]

இலங்கை செய்தி

அநுராதபுரம் சிறுமி துஷ்பிரயோக சம்பவம்: அவசரமாக கூடிய பெண் எம்.பிக்கள்: நடந்தது என்ன?

  • May 25, 2026
  • 0 Comments

அநுராதபுரம் பிரதேசத்தில் சிறுமியொருவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் எடுக்கக் கூடிய சட்ட நடவடிக்கைகள் மற்றும் சிறுமியின் பாதுகாப்புக் குறித்து ஆராய்வதற்கு பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தில் தீர்மானிக்கப்பட்டது. பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம் அதன் தலைவர் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தலைமையில் இன்று (25) கூடியபோதே இத்தீர்மானம் எடுக்கப்பட்டது. இதற்கமைய பொலிஸ், சட்டமா அதிபர் திணைக்களம், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை, நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்புத் திணைக்களம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் […]

உலகம் செய்தி

இன்னும் இறுதி ஒப்பந்தம் எட்டப்படவில்லை: ஈரான் தகவல்

  • May 25, 2026
  • 0 Comments

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டிருந்தாலும், இறுதி ஒப்பந்தம் இன்னும் எட்டப்படவில்லை என ஈரான் தெரிவித்துள்ளது. ஹார்முஸ் நீரிணையை மீள திறப்பது மற்றும் தற்காலிகப் போர்நிறுத்தம் போன்ற முக்கிய அம்சங்களில் இரு நாடுகளும் ஒரு முடிவுக்கு வந்துள்ளதாக இன்று மதியம் தகவல் வெளியானது. அமைதி ஒப்பந்தம் இன்று இறுதிப்படுத்தப்படலாம் என அமெரிக்க இராஜாங்க செயலாளரும் நம்பிக்கை வெளியிட்டிருந்தார். எனினும், ஈரானிய உயர்மட்டத் தலைமையுடன் தொடர்புகொள்வதில் உள்ள சிக்கல்கள் காரணமாக இந்த நடைமுறை சற்று தாமதமாகி […]

இந்தியா செய்தி தமிழ்நாடு

குதிரை வேகத்தில் குதிரை பேரம்: இதுவா தூயசக்தி?

  • May 25, 2026
  • 0 Comments

“தூயசக்தி என சுயதம்பட்டம் அடித்த தவெக, தற்போது குதிரை வேகத்தில் குதிரை பேர அரசியலை முன்னெடுத்துவருகின்றது.” என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். அதிமுக எம்எல்ஏக்கள் மூவர், பதவி துறந்துவிட்டு தவெகவில் இணைந்துள்ள நிலையிலேயே ஸ்டாலின் இவ்வாறு விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் “ காட்சி 1: பெரும்பான்மை இல்லாத நிலையில், திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம் ஆதரவு கேட்பது. காட்சி 2: நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிமுகவின் ஒரு அணியை ஆதரவாக […]

செய்தி பொழுதுபோக்கு

திரைப்படத் துறையினரின் கோரிக்கை ஏற்பு: முதல்வர் பிறப்பித்துள்ள உத்தரவு!

  • May 25, 2026
  • 0 Comments

புதிய திரைப்படங்கள் வெளியாகி ஒரு வாரத்துக்கு 5 காட்சிகள் திரையிடலாம் என்று தமிழக முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். மேலும், வார இறுதி நாட்கள், பொது விடுமுறை நாட்கள், மற்றும் பண்டிகை நாட்களிலும் தினசரி 5 காட்சிகள் திரையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திரைப்படத் துறையினர் முதல்வர் விஜய்யை கடந்த மே 16 ஆம் திகதி சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். குறிப்பாக தமிழ்நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில் அனைத்து திரைப்படங்களையும் நாளொன்றுக்கு ஜந்து காட்சிகள் திரையிட அனுமதியளிக்கும்படி கோரியிருந்தனர். […]

அரசியல் இலங்கை செய்தி

மாகாணசபைத் தேர்தலை முடக்க சதி: சுரேஷ் குற்றச்சாட்டு!

  • May 25, 2026
  • 0 Comments

மாகாண சபைத் தேர்தலை நடத்தாமல், ஒட்டுமொத்த மாகாண சபை முறைமையையே இல்லாமல் செய்வதற்கான சூழலைத் தற்போதைய அரசு தோற்றுவித்து வருகின்றது என்று ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். யாழ். ஊடக அமையத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். ” அமைச்சரவையிலோ அங்கம் வகிக்காத ஜே.வி.பி. கட்சியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா, மாகாண சபைத் தேர்தல் 2027ஆம் ஆண்டிலேயே நடத்தப்படும் […]

இலங்கை செய்தி

வவுணதீவில் முதியவர் சடலமாக மீட்பு: விசாரணை வேட்டை தீவிரம்!

  • May 25, 2026
  • 0 Comments

மட்டக்களப்பு, வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாவக்கொடிச்சேனை சிவன்கோவில் பாறைப் பகுதியில், உடம்பில் காயங்களுடன் முதியவர் ஒருவரின் சடலம் இன்று திங்கட்கிழமை காலை பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. உன்னிச்சை, நெடியமடுப் பகுதியைச் சேர்ந்த 63 வயதுடைய கணவதிபிள்ளை யோகராசா என்ற முதியவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார். இன்று காலை 8 மணியளவில் பாவக்கொடிச்சேனை சிவன் கோவில் பாறைப் பகுதியில், காயங்களுடன் நபர் ஒருவர் சடலமாகத் தரையில் கிடப்பதைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள், அது குறித்து உடனடியாக வவுணதீவு பொலிஸாருக்குத் தகவல் […]

error: Content is protected !!