மீட்பு பணி தீவிரம்: 5,000 இற்கு மேற்பட்ட படையினர் களமிறக்கம்
நேபாளம் மற்றும் சீன ஆட்சிக்கு உட்பட்ட திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் 160-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன், சுமார் 1,500 பேர் வரை இன்னமும் மாயமாகியுள்ளனர். இப் பேரழிவில் பாதிக்கப்பட்டவர்களைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. காணாமல் போனவர்களில் சுமார் 700 வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளும் அடங்குவர் என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மலைப் பகுதிகள் நிறைந்த இந்த எல்லை மண்டலம், மலையேற்றப் பயணிகள் மற்றும் யாத்ரீகர்கள் அதிகம் நடமாடும் பகுதியாகும். பாதிக்கப்பட்ட கரடுமுரடான மலைப் […]













