அரசியல் இலங்கை செய்தி

தமிழ்க் கட்சிகள் ஒன்றுபடாவிடின் ‘தாயகம்’ பறிபோகும்!

  • April 27, 2026
  • 0 Comments

“தமிழர்களுக்கான அரசியல் தீர்வு குறித்து ஆராய தமிழ்ச் சட்டத்தரணிகள் பேரவை எடுத்துவரும் ஒற்றுமை முயற்சிக்கு மத்தியில், தமிழ்த் தேசியப் பேரவை பிறிதொரு மாற்றுக் குழுவை முன்மொழிந்துள்ளமையானது தமிழ்க் கட்சிகளின் ஒருமைப்பாட்டைச் சிதைக்கும்” இவ்வாறு ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். இனப்பிரச்சினைக்கான தீர்வு மற்றும் புதிய அரசமைப்பு உருவாக்கம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கட்சிகளை ஒரு நிலைப்பாட்டுக்குக் கொண்டு வரத் தமிழ்ச் சட்டத்தரணிகள் பேரவை அண்மைக் காலமாகப் பல சந்திப்புகளைக் கொழும்பில் […]

செய்தி விளையாட்டு

பரபரப்பான ஆட்டத்தில் கொல்கத்தா அணி வெற்றி!

  • April 27, 2026
  • 0 Comments

IPL 2026 தொடரில் நேற்றிரவு நடைபெற்ற 38-வது லீக் ஆட்டத்தில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி த்ரில் வெற்றிபெற்றது. இறுதி பந்துவரை பரபரப்புக்கும், விறுவிறுப்புக்கும் பஞ்சம் இல்லாத இந்த ஆட்டம் வெற்றியை நிர்ணயிக்க சூப்பர் ஓவர்வரை சென்றது. லக்னோ ஏகானா மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 155 ஓட்டங்களைப் பெற்றது. பின்னர் 156 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய லக்னோ அணிக்கு […]

உலகம் செய்தி

அமைதி பேச்சை ரத்து செய்தார் ட்ரம்ப்!

  • April 26, 2026
  • 0 Comments

ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கிடையில் பாகிஸ்தானில் நடைபெறவிருந்த 2ஆம் கட்ட பேச்சுவார்த்தையை ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் திடீரென ரத்து செய்துள்ளார். ஈரான் தலைவர்களிடையே நிலவும் குழப்பமே இதற்குக் காரணம் எனக் கூறியுள்ள ட்ரம்ப், பேச்சுவார்த்தைக்கு ஈரான் தரப்பிலிருந்து முறையான அழைப்பு வரட்டும் எனத் தெரிவித்துள்ளார். தற்காலிக போர் நிறுத்தம் அமுலில் இருந்தாலும் ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் நிலவும் மோதல் மற்றும் எண்ணெய் ஏற்றுமதித் தடைகளால் இரு நாடுகளுக்கும் இடையில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகின்றது. இந்நிலையில் நேரடிப் பேச்சுவார்த்தையில் […]

உலகம் செய்தி

ஈரான் போருக்கும், துப்பாக்கிசூட்டு சம்பவத்துக்கும் தொடர்பா?

  • April 26, 2026
  • 0 Comments

ஈரான்மீதான போருக்கும், துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துக்கும் நேரடித் தொடர்பு இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். மேற்படி சம்பவத்தின் பின்னணியில் உள்ள உண்மையான நோக்கத்தைக் கண்டறியும் பணியில் புலனாய்வாரள்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தாக்குதலுக்கான காரணம் குறித்து ஆரம்பத்தில் சில சந்தேகங்கள் இருந்தபோதிலும், தற்போதைய தகவல்களின்படி இது போர்ச் சூழலோடு இணைக்கப்படவில்லை என்று ட்ரம்ப் விளக்கமளித்துள்ளார். இந்த அச்சுறுத்தல்கள் எதற்கும் அஞ்சாமல் ஈரான் விவகாரத்தில் தனது வெற்றியை நோக்கி தொடர்ந்து செயல்படப்போவதாகவும் ட்ரம்ப் உறுதிபட […]

உலகம் செய்தி

சந்தேக நபரின் படத்தை சமூகவலைத்தளத்தில் வெளியிட்ட ட்ரம்ப்!

  • April 26, 2026
  • 0 Comments

துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பான காட்சிகள் மற்றும் சந்தேக நபரின் புகைப்படம் என்பவற்றை தனது சமூகவலைத்தள பக்கம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்டுள்ளார். வெள்ளை மாளிகை ஊடகவியலாளர் சங்க விழாவின்போதே இப்பரபரப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது. “உண்மை நிலவரத்தை மக்கள் அறிய வேண்டும்” என்ற நோக்கத்தில் இந்த ஆதாரங்களைச் சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளேன்.” என்று ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். அதேவேளை, சந்தேக நபர் பொலிஸ் கண்காணிப்பின்கீழ் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவருகின்றார். அவருக்கு எதிராக விரைவில் சட்டநடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

விளையாட்டு

37 பந்துகளில் சதமடித்த இளம் வீரர்: பறிபோனது வெற்றி!

  • April 26, 2026
  • 0 Comments

IPL 2026 தொடரில் நேற்றிரவு நடைபெற்ற ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் வைபவ் சூர்யவன்ஷி 37 பந்துகளில் 103 ஓட்டங்களைப் பெற்று சாதனை படைத்தார். குறித்த போட்டி ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில் நேற்று இரவு 7.30 மணிக்கு நடைபெற்றது. இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி மிரட்டலான தொடக்கத்தைத் தந்தார். சன்ரைசர்ஸ் பந்துவீச்சை விளாசிய அவர், வெறும் 36 பந்துகளில் சதம் எடுத்து ஐபிஎல் வரலாற்றில் புதிய மைல்கல்லை எட்டினார். மொத்தம் 37 பந்துகளைச் சந்தித்த […]

உலகம் செய்தி

பாகிஸ்தானிலிருந்து புறப்பட்டார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

  • April 25, 2026
  • 0 Comments

ஈரான் வெளிவிவகார அமைச்சர் Abbas Araghchi இஸ்லாமாபாத்தில் உயர்மட்ட சந்திப்புகளை நடத்திய பின்னர் அங்கிருந்து புறப்பட்டுள்ளார். அடுத்ததாக ஓமான் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு அவர் பயணம் விஜயம் மேற்கொள்ளவுள்ளார் என ஈரான் அரச ஊடகம் தெரிவித்துள்ளது. தனது பாகிஸ்தான் பயணத்தின்போது பாகிஸ்தான் பிரதமர் மற்றும் இராணுவத் தளபதி ஆகியோருடன் ஈரான் வெளிவிவகார அமைச்சர் பேச்சு நடத்தி இருந்தார். ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கிடையில் அமைதியை ஏற்படுத்துவதற்குரிய மத்தியஸ்த முயற்சியை பாகிஸ்தான் முன்னெடுத்துவருகின்றது. இந்நிலையில் ஈரான் வெளிவிவகார அமைச்சரின் […]

செய்தி

நாட்டு மக்களிடம் ஈரான் ஜனாதிபதி விடுத்துள்ள அவசர கோரிக்கை!

  • April 25, 2026
  • 0 Comments

அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளால் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு மத்தியில், மின்சாரப் பயன்பாட்டைக் குறைக்குமாறு ஈரான் ஜனாதிபதி Masoud Pezeshkian அந்நாட்டு மக்களுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார். வெளிநாட்டு அழுத்தங்களால் நாட்டின் கட்டமைப்புகள் பாதிக்கப்படுவதால், மக்கள் அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டும் மின்சாரத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்துவது அவசியம் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். ஈரானை எல்லா வழிகளிலும் முடக்கி அதிருப்தியை உண்டாக்குவதை நோக்கமாகக் கொண்டே எதிரி நாடுகள் செயல்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். அமெரிக்கா மட்டும் அல்ல மேலும் பல நாடுகள் ஈரான்மீது பொருளாதாரத் தடைகளை […]

உலகம் செய்தி

தெற்கு லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்: நால்வர் பலி!

  • April 25, 2026
  • 0 Comments

தெற்கு லெபனானில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக லெபனான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. லொறி மற்றும் மோட்டார் சைக்கிள் என்பவற்றை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதலிலேயே இவர்கள் பலியாகியுள்ளனர். இவ்வாறு கொல்லப்பட்டவர்கள் ஆயுதங்களுடன் சென்ற ஹிஸ்புல்லா அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் என்று இஸ்ரேல் பாதுகாப்புப் படை விளக்கம் அளித்துள்ளது. தமது படை மற்றும் பொதுமக்களுக்கு ஏற்படவிருந்த அச்சுறுத்தலைத் தடுக்கவே தாக்குதல் நடத்தப்பட்டது எனவும் இஸ்ரேல் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இலங்கை செய்தி

ரம்மியமாக காட்சியளிக்கும் மருதானை ரயில் நிலையம் (படங்கள் இணைப்பு)

  • April 25, 2026
  • 0 Comments

மருதானை புகையிரத நிலையத்தின் முதற்கட்ட நவீனமயமாக்கல் பணிகள் நிறைவு செய்யப்பட்டு, இன்று (25) முற்பகல் பயணிகள் பயன்பாட்டிற்காக திறந்துவைக்கப்பட்டது. ‘Clean Sri Lanka’ வேலைத்திட்டத்துடன் இணைந்ததாக, ‘Dream Destination’ திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட இதற்குரிய நடவடிக்கை இடம்பெற்றது. புகையிரத பயணிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், மருதானை புகையிரத நிலையத்தின் புராதனத் தன்மைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தெரிவு செய்யப்பட்ட சில பகுதிகள் மாத்திரம் இவ்வாறு நவீனமயமாக்கப்பட்டுள்ளன. இதன் கீழ் பிரதான கட்டிடம் திருத்தப்பட்டதுடன், 05 மற்றும் […]

error: Content is protected !!