இலங்கை செய்தி

100 அடி பள்ளத்தில் வீழ்ந்து இரண்டாக உடைந்தது லொறி: இருவர் படுகாயம்!

  • April 25, 2026
  • 0 Comments

நுவரெலியா மாவட்டம், லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லிந்துலை, லெமனியர் தோட்டத்தில் கனரக லொறியொன்று சுமார் 100 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் சாரதியும், உதவியாளரும் படுகாயம் அடைந்துள்ளனர். மொனறாகலை வெல்லவாய பகுதியில் இருந்து ஹட்டனிலுள்ள தேயிலை தொழிற்சாலையொன்றுக்கு விறகு ஏற்றிவந்த லொறியொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் லொறி இரண்டாக உடைந்து கடுமையாக சேதமடைந்துள்ளது. படுகாயமடைந்த சாரதியும், உதவியாளரும் லிந்துலை வைத்தியசாலையில் இருந்து மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பில் லிந்துலை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

உலகம் செய்தி

கடற்படை முற்றுகையை அமெரிக்கா கைவிடாவிட்டால் பதிலடி உறுதி: ஈரான் திட்டவட்டம்!

  • April 25, 2026
  • 0 Comments

அமெரிக்காவின் கடற்படை முற்றுகை தொடர்ந்தால் அதற்கு எதிராகக் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நாட்டின் இறையாண்மை மற்றும் எல்லைகளைப் பாதுகாக்க முந்தைய காலங்களை விட தற்போது தாங்கள் அதிக வலிமையுடன் இருப்பதாக அந்நாட்டு ராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, ஹார்முஸ் நீரிணை பகுதியைக் கண்காணித்து வரும் ஈரான், அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகளின் நடவடிக்கைகள் குறித்தும் அவதானம் செலுத்திவருகின்றது. அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் மற்றும் கடற்படை அழுத்தங்களுக்கு மத்தியில் ஈரான் தனது […]

செய்தி

ஈரானில் 57 ஆவது நாளாக நீடிக்கும் இணைய முடக்கம்!

  • April 25, 2026
  • 0 Comments

ஈரான் அரசு அமுல்படுத்தியுள்ள இணைய முடக்கம் தற்போது எட்டு வாரங்களைக் கடந்து நீடிக்கிறது. 57 ஆவது நாளாக நீடிக்கும் இத்தடையால் மக்களின் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதுடன், அந்நாட்டின் பொருளாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. அரசின் கட்டுப்பாடுகளைத் தகர்க்கச் சிலர் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் கருவிகளைப் பயன்படுத்தினாலும், அது பெரும் அபாயத்தை உள்ளடக்கியுள்ளது. இத்தகைய கருவிகளை வைத்திருப்பது அல்லது பயன்படுத்துவது ஈரானில் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை பெற்றுத் தரக்கூடிய குற்றமாகக் கருதப்படுகிறது.

இந்தியா செய்தி தமிழ்நாடு

விஜய்க்கு புறாவால் வந்த ‘வினை’!

  • April 25, 2026
  • 0 Comments

விஜய் அரசியல் களத்துக்கு வந்தது முதலே பல்வேறு நெருக்கடிகளை சந்தித்துவருகின்றார். தேர்தல் பரப்புரைகளின்போது பல சவால்களை எதிர்கொண்டார். தற்போது தேர்தல் முடிந்த பின்பும் அவருக்கான சிக்கல் ஓயவில்லை. தேர்தல் பிரச்சாரத்தின்போது புறாவுக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் வண்ணம் பூசப்பட்டு பறக்கவிடப்பட்ட விவகாரத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு பீட்டா அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. திருச்சியில் ஏப்ரல் 19ஆம் திகதி நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தின்போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் பீட்டா இந்தியா அமைப்பு , தவெக தலைவர் தலைவர் […]

உலகம் செய்தி

அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டால் ஹார்முஸ் நீரிணையில் துருக்கி களமிறங்கும்!

  • April 25, 2026
  • 0 Comments

அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கிடையில் அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டால், ஹார்முஸ் நீரிணையில் கண்ணிவெடி அகற்றும் பணியில் துருக்கி இணையக்கூடும். துருக்கி வெளிவிவகார அமைச்சர் Hakan Fidan மேற்படி தகவலை வெளியிட்டுள்ளார். மேற்படி தூய்மைப்படுத்தும் பணிகளைப் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தொழில்நுட்பக் குழுக்கள் மேற்கொள்ளும் பட்சத்தில், அதில் பங்கேற்பதில் துருக்கிக்கு எவ்விதத் தடையும் இருக்காது என்று அவர் கூறியுள்ளார். எனினும், இந்த விவகாரத்தில் ஈடுபடும் நாடுகள் ஏதேனும் புதிய மோதல்களில் சிக்கினால், தனது நிலைப்பாட்டை துருக்கி மறுபரிசீலனை […]

செய்தி

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்காக ஈழத்து மக்களாக ஒன்றிணைவோம்!

  • April 25, 2026
  • 0 Comments

“இவ்வருடத்துக்கான முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அனைத்து தமிழ் பேசும் மக்களும் ஒன்றிணைந்து ஈழத்து மக்களாக நினைவுகூர வேண்டும்.” இவ்வாறு தமிழர் மரபுரிமை பேரவையின் இணைத்தலைவரும், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குழுவின் வடகிழக்கு பொதுக்கட்டமைப்பின் இணைத்தலைவருமான அருட்பணி சின்னத்துரை லியோ ஆம்ஸ்ரோங், அறைகூவல் விடுத்துள்ளார். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றத்தில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு , “ 2009 மே 18 தமிழ் இன அழிப்பு நாளை நினைவுகூரும் வகையில் […]

உலகம் செய்தி

புதிய திட்டத்தை முன்வைத்துள்ள ஈரான்: ட்ரம்ப் தகவல்!

  • April 25, 2026
  • 0 Comments

ஈரான் புதியதொரு திட்டத்தை முன்வைத்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். எனினும், அதன் முழுமையான விபரங்கள் இன்னும் தனக்குத் தெரியவில்லை எனவும் கூறியுள்ளார். அமெரிக்க அரசு தற்போது ஈரானின் முக்கிய அதிகாரிகளுடன் நேரடிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் சிக்கல்களைத் தீர்ப்பதற்கும் ஒரு புதிய ஒப்பந்தத்தை எட்டுவதற்கும் ஈரான் ஆர்வம் காட்டி வருவதாக ட்ரம்ப் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இலங்கை செய்தி

வடக்குக்கான அதிவேக நெடுஞ்சாலை குறித்து ஆராய்வு!

  • April 25, 2026
  • 0 Comments

வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்திச் செயற்றிட்டங்கள் தொடர்பில், நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோவுக்கு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் விரிவாகத் தெரியப்படுத்தினார். வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நேற்று (24.04.2026) வெள்ளிக்கிழமை இரவு ஆளுநருக்கும், பிரதி அமைச்சருக்கும் இடையிலான விசேட கலந்துரையாடலொன்று நடைபெற்றது. போரால் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாணத்தின் உட்கட்டமைப்புத் தேவைப்பாடுகள் இன்னமும் அதிகமாகக் காணப்படுவதை ஆளுநர் சுட்டிக்காட்டினார். குறிப்பாக, வன்னிப் பிரதேசத்தில் உள்ள கிராமங்களை இணைக்கும் வீதிகள் […]

உலகம் செய்தி

பாகிஸ்தான் ராணுவ தளபதி, ஈரான் வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு!

  • April 25, 2026
  • 0 Comments

  ஈரான் வெளிவிவகார அமைச்சர் Abbas Araghchi மற்றும் பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஆசிம் முனீர் Field Marshal Asim Munir ஆகியோருக்கு இடையில் முக்கிய சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது மற்றும் பிராந்திய பாதுகாப்பு நிலைவரங்கள் குறித்து இதன்போது ஆராயப்பட்டுள்ளது. அதேவேளை, பாகிஸ்தான் பயணத்தை தொடர்ந்து, தனது அடுத்தகட்டமாக ஓமான் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் பயணம் மேற்கொள்ள உள்ளார்.

இலங்கை செய்தி

NPP அரசுக்கு தலையிடியாக மாறியுள்ள’ இணைய மோசடி’!

  • April 25, 2026
  • 0 Comments

நிதி அமைச்சின் கணினி அமைப்புகளை ஊடுருவிய இணையக் குற்றவாளிகளால் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் திருடப்பட்ட சம்பவம் குறித்து சர்வதேச நாணய நிதியம் IMF அவதானம் செலுத்தியுள்ளது. ஆங்கில இணைய ஊடகமொன்று மேற்படி தகவலை வெளியிட்டுள்ளது. பொருளாதார மறுசீரமைப்புத் துறையின் கணினி அமைப்புகளுக்கு அனுமதியின்றி அணுகப்பட்டதை உறுதி செய்து இலங்கை நிதி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கை குறித்து நாங்கள் அறிந்திருக்கிறோம். இந்த முக்கிய நிகழ்வை நாங்கள் கவனத்தில் கொண்டு, நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம் என்று சர்வதேச […]

error: Content is protected !!