சிறைச்சாலை கலவரம்- நாடாளுமன்றில் இன்று அனல் பறக்கும் விவாதம்
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவங்கள் தொடர்பில் இலங்கை நாடாளுமன்றத்தில் இன்று 3 மணித்தியாலங்கள் விவாதம் நடைபெறவுள்ளது.
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, சபாநாயகரிடம் முன்வைத்த கோரிக்கையின் பிரகாரமே இதற்குரிய விவாதம் நடைபெறுகின்றது.
மேற்படி விவாதத்துக்கு எதிர்க்கட்சி தலைவர், 4 மணித்தியாலங்களை கோரி இருந்தாலும், ஆளுங்கட்சியால் 3 மணிநேரமே ஒதுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய இன்று பிற்பகல் 3.30 மணி முதல் மாலை 6.30 மணிவரை, சிறைச்சாலை மோதல் தொடர்பில் விவாதம் இடம்பெறவுள்ளது என்று சபாநாயகர் தெரிவித்தார்.




