திருகோணமலை- ஸ்ரீபுர பொலிஸ் நிலையம் உத்தியோகப்பூர்வமாக திறப்பு
திருகோணமலை- ஸ்ரீபுர பொலிஸ் நிலையத்தின் புதிய நிர்வாகக் கட்டிடம் திருகோணமலை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் டி.எம்.யூ.மஹிந்த திஸாநாயக்கவினால் நேற்று உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. யுத்த காலத்தின் போது மக்களின் பாதுகாப்பிற்காக ஸ்ரீபுர கூட்டுறவு கட்டிடத்தில் தற்காலிகமாக இயங்கி வந்த குறித்த பொலிஸ் நிலையம் ஏழரை இலட்சம் ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது. 30 இலட்சம் ரூபாய் செலவாகும் என திட்டமிடப்பட்ட நிலையில் 10 மாதத்திற்குள் ஸ்ரீபுர பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியாக கடமையாற்றி […]




