செய்தி தமிழ்நாடு

தமிழகத்தில் அமைதி கால கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு

  • April 21, 2026
  • 0 Comments

தமிழகத்தில் வாக்​குப்​ப​திவு நாளான 23 ஆம் திகதி மாலை 6 மணி வரையி​லான 48 மணி நேர அமைதி கால கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வந்தன. தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் பிரச்​சா​ரம் இன்று மாலை 6 மணி​யுடன் நிறைவடைந்தது. அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இன்று மாலையுடன் தங்கள் பிரச்சாரத்தை நிறைவு செய்தனர். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்றுடன் ஓய்ந்த நிலையில், இன்று காலை முதல் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் சென்னையில் உள்ள சோழிங்கநல்லூர், வேளச்சேரி, […]

ஐரோப்பா செய்தி

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் 100 அவது பிறந்த நாள் – மன்னர் வெளியிட்ட காணொளி

  • April 21, 2026
  • 0 Comments

மறைந்த தனது தாயான இரண்டாம் எலிசபெத் மகாராணியின் 100 அவது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது பொதுச் சேவை வாழ்க்கையை நினைவுகூரும் வகையில் மன்னர் சார்லஸ் விசேட காணொளிச் செய்தியொன்றை வெளியிட்டுள்ளார். உலகின் தற்போதைய நிலையைத் தனது தாய் நிச்சயம் ஏற்றுக் கொண்டிருக்க மாட்டார் என்றும் மன்னர் எச்சரித்தார். நாம் இப்போது வாழும் இந்தக் காலகட்டத்தைப் பற்றிய பல விடயங்கள் அவரை மிகவும் கவலையடையச் செய்திருக்கக்கூடும் என்றும் தான்சந்தேகிக்கிப்பதாகவும் மன்னர் கவலை வெளியிட்டுள்ளார். ஆனால் மன்னர் உள்நாட்டு அல்லது […]

ஐரோப்பா செய்தி

மண்டேல்சன் தொடர்பான பாதுகாப்பு விவகாரம் – Robbins நாளை சாட்சியம்

  • April 20, 2026
  • 0 Comments

பிரித்தானியாவின் முன்னாள் வெளியுறவு அலுவலக நிரந்தர துணைச் செயலாளர் ஆலி ராபின்ஸ் (Olly Robbins), வெளியுறவு விவகாரக் குழுவின் முன் நாளை காலை சாட்சியம் அளிக்கவுள்ளார். 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அந்தப் பதவியில் இருந்த அவர், கடந்த வாரம் பதவி விலகினார். பீட்டர் மண்டேல்சன் தொடர்பான பாதுகாப்பு விவகாரம் குறித்து சரியான தகவல் பிரதமருக்கு தெரிவிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகளுக்குப் பிறகே இந்த பதவி விலகல் இடம்பெற்றது. பிரதமர் ஸ்டார்மர் மற்றும் வெளியுறவுச் செயலாளர் […]

ஐரோப்பா செய்தி

மண்டேல்சன் விவகாரம் தேசிய பாதுகாப்புப் பிரச்சினை – எதிர்க்கட்சி குற்றச்சாட்டு

  • April 20, 2026
  • 0 Comments

லோர்ட் மண்டேல்சன் தொடர்பான விவகாரம் “தேசிய பாதுகாப்புப் பிரச்சினை” என எதிர்க்கட்சித் தலைவர் Kemi Badenoch, குற்றம் சுமத்தியுள்ளார். பாதுகாப்பு அச்சுறுத்தலாகக் கருதப்பட்ட ஒருவர் முக்கிய தூதுவர் பதவிக்கு நியமிக்கப்பட்டதாக அவர் விமர்சித்தார். இதனால் முக்கியமான தகவல்கள் மற்றும் உளவுத்துறை விபரங்கள் அந்த நபரிடம் சென்றிருக்கலாம் என்றும் அவர் எச்சரித்தார். மேலும், இந்த விவகாரத்தில் பிரதமர் Starmer பொறுப்பேற்காமல், உள்ளார் என்றும் Kemi Badenoch குற்றம் சாட்டினார். பிரதமர் பதவி விலக வேண்டும் என தான் வலியுறுத்தியதாக […]

உலகம் செய்தி

அமெரிக்கா–ஈரான் பேச்சுவார்த்தையில் குழப்பம் – நேரம் கேள்விக்குறி

  • April 20, 2026
  • 0 Comments

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான இரண்டாவது சுற்று அமைதிப் பேச்சுவார்த்தைகள் இந்த வாரம் திங்கட்கிழமை நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவை எப்போது நடைபெறும் என்பது குறித்து முரண்பட்ட தகவல்கள் வெளியாகியதால், பேச்சுவார்த்தையின் நேரம் தற்போது தெளிவற்றதாகியுள்ளது. இந்த மாத தொடக்கத்தில் நடந்த முதல் சுற்றுப் பேச்சுவார்த்தைகளைப் போன்றே, அமெரிக்கக் குழுவை துணை ஜனாதிபதி JD Vance தலைமை தாங்குவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் இஸ்லாமாபாத் செல்லவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், ஈரான் தரப்பிலிருந்து முரண்பட்ட சிக்னல்கள் […]

இந்தியா செய்தி

ஜம்மு காஷ்மீரில் பெரும் சோகம் – 22 பேர் உயிரிழப்பு

  • April 20, 2026
  • 0 Comments

இந்தியாவின் ஜம்மு காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில் இன்று பயணிகள் பேருந்தொன்று வீதியிலிருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் 22 பேர் உயிரிழந்தனர். இதன்போது 30 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் பலர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதால், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. ராம்நகரிலிருந்து உதம்பூரை நோக்கிச் சென்று கொண்டிருந்த பயணிகள் பேருந்து, காலை சுமார் 10 மணியளவில், வளைவு ஒன்றில் திருப்பும்போது கட்டுப்பாட்டை இழந்து, மலையோரப் பள்ளத்தாக்கில் வீழ்ந்தது. இந்த விபத்தைத் தொடர்ந்து, இராணுவம், பொலிஸ் மற்றும் […]

ஐரோப்பா செய்தி

மண்டேல்சனை நியமித்தது தவறு – மன்னிப்பு கோரிய பிரதமர்

  • April 20, 2026
  • 0 Comments

மண்டேல்சனை நியமித்தது தவறு என்பதை House of Commons இல் பிரதமர் Starmer ஒப்புக்கொண்டார். மேலும், தனது முடிவின் விளைவாக பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறி, பாலியல் குற்றவாளியான Jeffrey Epstein இனால் பாதிக்கப்பட்டவர்களிடம் மீண்டும் மன்னிப்பு கோரினார். பீட்டர் மண்டேல்சனுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு சரிபார்ப்பு அனுமதி குறித்த முக்கிய தகவல் தாமதமாகவே கிடைத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு சரிபார்ப்பு முகமையின் பரிந்துரைக்கு எதிராக, 2025 ஜனவரி 29 அன்று வெளியுறவு அலுவலக அதிகாரிகள் மண்டேல்சனுக்கு மேம்படுத்தப்பட்ட […]

இலங்கை செய்தி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – பலத்த பாதுகாப்புடன் 07 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் நாளை

  • April 20, 2026
  • 0 Comments

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் 07 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் நாளை (21) நடைபெறவுள்ளன. இதனை முன்னிட்டு, கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தை அண்மித்த வீதிகளில் விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. நாளை அதிகாலை முதல் நினைவேந்தல் நிகழ்வுகள் நிறைவடையும் வரை இந்த போக்குவரத்து மாற்றங்கள் அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நினைவேந்தல் நிகழ்வுகளை முன்னிட்டு தேவாலயத்தை அண்மித்த பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்கமைய காலை 8:45 […]

செய்தி

பொறுப்பற்ற செய்தி வெளியீடு ஜனநாயக செயல்முறையையே பாதிக்கக்கூடும் – பிரித்தானிய ஆய்வாளர்கள் எச்சரிக்கை

  • April 4, 2026
  • 0 Comments

பிரித்தானியாவின் ஊடகங்களில் வெளியாகும் தவறான மற்றும் தெளிவற்ற செய்திகளால், வேல்ஸ் வாக்காளர்கள் அரசியல் தகவல்களில் பெரும் குழப்பத்திற்குள்ளாகியுள்ளனர் என புதிய ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. கார்டிஃப் பல்கலைக்கழகம் ஆய்வு செய்த 3,000 க்கும் மேற்பட்ட செய்திகளில், இங்கிலாந்துக்கான கொள்கைகள் முழு பிரித்தானியாவுக்கும் பொருந்துவது போன்று சித்தரிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இதனால், வேல்ஸில் அதிகாரப் பகிர்வு செய்யப்பட்ட விவகாரங்கள் குறித்து மக்கள் தவறான புரிதலுக்கு உள்ளாவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், “அரசாங்கம்” போன்ற பொதுவான சொற்கள் பயன்படுத்தப்பட்டதால், எந்த நிர்வாகம் எந்தக் கொள்கைக்கு […]

இலங்கை செய்தி

தேங்காய் எண்ணெயில் கலப்படம் – 05 வர்த்தகர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை

  • April 2, 2026
  • 0 Comments

கல்முனை மற்றும் சாய்ந்தமருது பிரதேசங்களில் உணவுக்கு பயன்படுத்தப்படும் தேங்காய் எண்ணெயில் கலப்படம் செய்த 05 வியாபார நிலையங்களின் உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் மீதான வழக்குகள் வியாழக்கிழமை (02) கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது ஐவரும் தலா ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்ட துடன், குற்றங்களுக்கான அபராதம் மற்றும் தண்டனை குறித்து அறிவிப்பதற்காக எதிர்வரும் மே மாதம் 01 மற்றும் 07 ஆம் திகதிகளுக்கு வழக்குகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. […]