உலகம் செய்தி

இந்தோ-பசுபிக் பகுதியில் அமெரிக்க கடல்சார் நடவடிக்கை தீவிரம் : தடைசெய்யப்பட்ட எண்ணெய் கப்பல் இடைமறிப்பு

  • April 23, 2026
  • 0 Comments

இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் எண்ணெய் கப்பல் ஒன்றில் அமெரிக்கப் படைகள் ஏறிய சம்பவத்திற்குப் பின்னர், இந்தியப் பெருங்கடலில் மேலும் ஒரு நடவடிக்கையை அமெரிக்கா மேற்கொண்டுள்ளது. ஏப்ரல் 21 ஆம் திகதி, அமெரிக்க பாதுகாப்புத் துறை சமூக ஊடகங்களில் வெளியிட்ட தகவலின்படி, “நாடற்ற மற்றும் தடைசெய்யப்பட்ட எம்/டி டிஃபானி” எனப்படும் கப்பல் அமெரிக்கப் படைகளால் வழிமறிக்கப்பட்டு அதில் ஏறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சட்டவிரோத வலையமைப்புகளை முறியடிக்கவும், ஈரானுக்கு பொருளாதார ஆதரவு வழங்கும் தடைசெய்யப்பட்ட கப்பல்களை உலகின் எங்கிருந்தாலும் இடைமறிக்கவும், கடல்சார் […]

உலகம் செய்தி

ஹோர்முஸில் அமெரிக்காவின் அனுமதி இன்றி எந்தக் கப்பலும் செல்ல முடியாது – ட்ரம்பின் அதிரடி அறிவிப்பு

  • April 23, 2026
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி  டொனால்ட் ட்ரம்ப், ஈரானின் அரசியல் நிலை குறித்து கடுமையான கருத்துகளை வெளியிட்டுள்ளார். ட்ரூத் சோஷியல் தளத்தில் வெளியிட்ட பதிவில், “ஈரானியர்களுக்கு தங்கள் தலைவர் யார் என்பதே தெரியவில்லை” என அவர் தெரிவித்துள்ளார். நாட்டில் கடும்போக்காளர்களுக்கும் மிதவாதிகளுக்கும் இடையில் கடும் உட்கட்சிப் போட்டி நடைபெறுவதாகவும் அவர் கூறினார். மேலும், ஹோர்முஸ் நீரிணை மீது அமெரிக்காவுக்கு முழுமையான கட்டுப்பாடு இருப்பதாகவும், அமெரிக்காவின் அனுமதி இல்லாமல் எந்தக் கப்பலும் அங்கு செல்ல முடியாது என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இந்த […]

இலங்கை செய்தி

நிதி அமைச்சின் சைபர் மோசடி விசாரணை – இலங்கைக்கு அவுஸ்திரேலியா ஒத்துழைப்பு

  • April 23, 2026
  • 0 Comments

அவுஸ்திரேலிய அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய கடன் கொடுப்பனவுகளில் இடம்பெற்ற பாரிய நிதி மோசடி மற்றும் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் கணினி அமைப்பினுள் ஊடுருவியமை குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய தூதரகம் மற்றும் நிதி அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளன. அவுஸ்திரேலிய ஏற்றுமதி நிதி முகவர் நிறுவனம் (Australian Export Finance Agency) மற்றும் திறைசேரிக்கு இடையில் பரிமாறப்பட்ட மின்னஞ்சல்களை ஹேக்கர்கள் இடைமறித்து, வங்கி கணக்கு இலக்கங்களை மாற்றி பணத்தை தமது கணக்குகளுக்கு திசை திருப்பியுள்ளனர். இந்தியாவுக்கு செலுத்த வேண்டிய கொடுப்பனவிலும் […]

செய்தி தமிழ்நாடு

ஸ்டாலின் 2 ஆவது முறையாக ஆட்சியமைக்கப் போவது உறுதி – பிரேமலதா நம்பிக்கை

  • April 23, 2026
  • 0 Comments

மு.க.ஸ்டாலின் இரண்டாவது முறையாக ஆட்சியமைக்கப் போவது உறுதி என்றும் 234 தொகுதிகளில் 200 தொகுதிகளுக்கு மேல் எங்கள் கூட்டணி வெற்றி பெறும் என்றும் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார். சென்னை சாலிகிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா, தனது மகன்களுடன் வாக்களித்தார். இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த  அவர், “ தமிழகம் முழுவதும் தேமுதிக 10 இடங்களில் போட்டியிடுகிறது. எங்களின் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி நிச்சயமாக இந்த தேர்தலில் மகத்தான வெற்றி […]

உலகம் செய்தி

ஈரானில் முரண்பாடு இல்லை, கொள்கை நிலை சீராக உள்ளது – சர்வதேச நிபுணர் விளக்கம்

  • April 21, 2026
  • 0 Comments

ஈரானின் அரசியல் மற்றும் இராணுவ நிலைப்பாடுகள் குறித்து வெளிவரும் முரண்பட்ட தகவல்கள், உண்மையில் உள்நாட்டு குழப்பத்தை காட்டுவதல்ல என சர்வதேச நெருக்கடிக் குழுவின் ஈரான் திட்ட பணிப்பாளர் தெரிவித்துள்ளார். பிபிசி ரேடியோ 4 ‘டுடே’ நிகழ்ச்சியில் உரையாற்றிய அலி வேஸ், ஈரான் ஆட்சி கொள்கை வகுப்பிலும், அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை நிலைப்பாட்டிலும் உயர் அளவிலான ஒருங்கிணைப்புடன் செயல்படுவதாக கூறினார். ஈரானில் இருந்து வரும் சில முரண்பட்ட செய்திகள் உண்மையில் அமெரிக்க ஜனாதிபதி வெளியிடும் மாற்றமான நிலைப்பாடுகளுக்கு எதிர்வினையாகவே பார்க்கப்பட […]

ஐரோப்பா செய்தி

கடும் கட்டுப்பாடு – பிரித்தானியாவில் புகைப்பழக்கமற்ற தலைமுறை சட்டம் நிறைவேற்றம்

  • April 21, 2026
  • 0 Comments

புகையிலை மற்றும் வேப் தொடர்பான புதிய மசோதா பிரித்தானிய பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் 17 வயது மற்றும் அதற்கு குறைந்த வயதுடையவர்கள் வாழ்நாள் முழுவதும் சிகரெட் வாங்க முடியாத நிலை உருவாகிறது. 2009 ஜனவரி 1க்கு பிறகு பிறந்தவர்கள் புகைப்பிடிப்பு பழக்கத்தை தொடங்குவதைத் தடுக்கும் நோக்கில் இந்த புதிய சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இது “புகைப்பழக்கமற்ற தலைமுறை” உருவாக்கும் முயற்சியாகக் கருதப்படுகிறது. சட்டம் அமலுக்கு வந்தால், புகையிலை, வேப்பிங் மற்றும் நிகோடின் பொருட்கள் தொடர்பான விதிமுறைகளை மேலும் […]

உலகம் செய்தி

பாகிஸ்தானில் மீண்டும் போர் நிறுத்த பேச்சுவார்த்தை – பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு

  • April 21, 2026
  • 0 Comments

பாகிஸ்தானில் நடைபெறவுள்ள இரண்டாவது சுற்று அமைதிப் பேச்சுவார்த்தைகள் தொடர்பான நிச்சயமற்ற நிலை தொடர்வதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எனினும், பேச்சுவார்த்தைகள் நடைபெறக்கூடும் என்ற எதிர்பார்ப்பில் இஸ்லாமாபாத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நகரின் முக்கிய வீதிகளில் இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தைகள் எனும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு, அரசாங்கத்தின் தயார்நிலை வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்கா, ஈரான் மற்றும் வளைகுடா நாடுகளுடன் தொடர்புகளை வைத்திருக்கும் பாகிஸ்தான், இந்த சூழலில் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. அதேவேளை, ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான பதற்றமான சூழ்நிலைகளில் பாகிஸ்தான் […]

இலங்கை செய்தி

நாட்டில் மருந்துப் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் – அவசர நடவடிக்கை எடுக்குமாறு அழைப்பு

  • April 21, 2026
  • 0 Comments

நாட்டின் மருந்து விநியோகச் சங்கிலியில் அதிகரித்து வரும் அழுத்தம் காரணமாக, அத்தியாவசிய மற்றும் உயிர் காக்கும் மருந்துகளைத் தடையின்றி அணுகுவதை உறுதி செய்யும் நாட்டின் திறன் பாதிக்கப்படக்கூடும் என இலங்கை மருந்துத் தொழில்துறை சம்மேளனம் (SLCPI) எச்சரித்துள்ளது. இந்த மருந்துப் பற்றாக்குறை நெருக்கடியைத் தடுப்பதற்கு அரசாங்கம் அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சம்மேளனம் அழைப்பு விடுத்துள்ளது. உடனடி மற்றும் நடைமுறை நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், தனியார் மற்றும் பொது சுகாதாரத் துறைகளில் அதிகரித்து வரும் தட்டுப்பாட்டை இலங்கை […]

ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவில் வேலையின்மையில் எதிர்பாராத சரிவு – வேலை சந்தையில் புதிய மாற்றம்

  • April 21, 2026
  • 0 Comments

பிரித்தானியாவில் வேலையின்மை விகிதம் எதிர்பாராத வகையில் குறைந்துள்ளது என தேசிய புள்ளிவிபரவியல் அலுவலகம் தெரிவித்துள்ளது. பெப்ரவரி வரையிலான மூன்று மாதங்களில் வேலையின்மை 4.9% ஆகக் குறைந்துள்ளது. இது முன்னதாக 5.2% ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது. அதேவேளை, வேலை தேடாதவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் மொத்த வேலைவாய்ப்பு கணக்கில் இந்த சரிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக மாணவர்கள் படிப்புடன் வேலை தேடுவதை குறைத்திருப்பதும் ஒரு காரணமாகும். இந்த காலகட்டத்தில் ஊதிய உயர்வு 3.6% ஆக இருந்துள்ளது. இது சமீப […]

உலகம் செய்தி

ஈரானை சூழும் பொருளாதார பேரிடி – சிக்கனத்தை கடைப்பிடிக்குமாறு வலியுறுத்தல்

  • April 21, 2026
  • 0 Comments

ஈரானில் பொருளாதார நிலை மேலும் மோசமடையக்கூடும் என்ற அச்சத்தில், இஸ்லாமியக் குடியரசின் பாதுகாப்புப் படையினர் உட்பட பலர் மக்கள் சிக்கனத்தை கடைப்பிடிக்குமாறு வலியுறுத்தி வருகின்றனர். ஹோர்முஸ் நீரிணையில் நிலவும் பதற்றம் தொடர்ந்தால், அரசாங்கம் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் சிரமம் ஏற்படுமா? பேச்சுவார்த்தைகளை நிறுத்தும் நிலையை ஈரான் தாங்குமா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன. போருக்கு முன்பே பொருளாதார தடைகள், பணவீக்கம் மற்றும் நாணய மதிப்பிழப்பு காரணமாக மக்கள் கடுமையான நெருக்கடியில் இருந்தனர். அத்தியாவசிய தேவைகளுக்கே பெரும்பாலான குடும்பங்கள் செலவிடும் […]