ஜனாதிபதி மக்களின் வாழ்வாதாரம் பற்றி சிந்திக்க வேண்டும் – நாமல்
நாடாளுமன்றத்தில் கைதுகள் மற்றும் விசாரணைகள் குறித்து விவாதிப்பதை விடுத்து, அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவைக் குறைப்பதில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று ஜனாதிபதி பேசிய விடயங்கள் தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்ட அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த அறிக்கையில் மேலும் தெரிவித்த அவர், நாடு முழுவதும் உள்ள குடும்பங்கள் சந்திக்கும் பொருளாதார நெருக்கடிகளுக்குத் தீர்வுகள் காண்பதற்காக மக்கள் ஜனாதிபதியையே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும், நடைபெற்று வரும் விசாரணைகள் […]






