விளையாட்டு

ராஜஸ்தான், டெல்லி அணிகள் இன்று மோதல்!

  • May 1, 2026
  • 0 Comments

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 43 ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை, டெல்லி கேப்பிடல்ஸ் அணி எதிர்த்து விளையாடவுள்ளது. இப்போட்டி ஜெய்ப்பூர் சவாய்மான்சிங் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறவுள்ளது. ராஜஸ்தான் அணி இதுவரை 9 போட்டிகளில் விளையாடி 6 வெற்றி, 3 தோல்விகளுடன் 12 புள்ளிகளைப் பெற்று பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது. கடைசியாக நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் பலம்வாய்ந்த அந்த அணியை வீழ்த்திய உற்சாகத்தில் ராஜஸ்தான் களமிறங்குகிறது. […]

விளையாட்டு

ஆர்.சி.பியை வீழ்த்தியது குஜராத்!

  • May 1, 2026
  • 0 Comments

ஐ.பி.எல்.தொடரில் நேற்றிரவு நடைபெற்ற 42 ஆவது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று 30) நடைபெற்ற இந்தப் போட்டியில், நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்த குஜராத் அணி. ஆரம்பம் முதலே பெங்களூரு வீரர்களுக்கு நெருக்கடி கொடுத்தது. விராட் கோஹ்லி (28) அதிரடியாகத் தொடங்கினாலும், ககிசோ ரபாடா அவரை விரைவில் வெளியேற்றினார். தேவ்தத் படிக்கல் (40) ஓரளவிற்குப் போராடிய நிலையில், மற்ற வீரர்கள் […]

உலகம் செய்தி

பிரிட்டனில் பாதுகாப்பு ஏற்பாடு “தீவிரம்”!

  • May 1, 2026
  • 0 Comments

லண்டனில் யூத மக்கள் மீது நடத்தப்பட்ட கத்திக்குத்துத் தாக்குதலைத் தொடர்ந்து, பிரித்தானிய அரசு தனது தேசிய பயங்கரவாத அச்சுறுத்தல் நிலையை “தீவிரம்” என உயர்த்தியுள்ளது. அடுத்த ஆறு மாதங்களுக்குள் தாக்குதல்கள் நடப்பதற்கான அதிக வாய்ப்புள்ளதை இந்த அறிவிப்பு குறிக்கிறது. பிரித்தானிய பிரதமர் கீர் ஸ்டார்மர், யூத சமூகத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்த கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதாக உறுதியளித்துள்ளார். இம்முடிவானது சமீபத்திய வன்முறைகள் மற்றும் வெளிநாட்டு சக்திகளின் தலையீடுகளால் அதிகரித்துள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் தற்போதைய […]

ஆஸ்திரேலியா செய்தி

பயண எச்சரிக்கை விடுத்தது ஆஸ்திரேலியா!

  • May 1, 2026
  • 0 Comments

லண்டனில் இரு யூதர்கள்மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, பாதுகாப்பு எச்சரிக்கை நிலையை ‘தீவிரம்’ என்ற நிலைக்கு பிரிட்டன் உயர்த்தியுள்ளது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, அங்கு பயணம் செய்யும் ஆஸ்திரேலியப் பயணிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு ஆஸ்திரேலிய அரசு அறிவுறுத்தியுள்ளது. இத்தாக்குதலில் தொடர்புடையதாகக் கருதப்படும் நபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இதற்குப் பின்னால் ஈரான் ஆதரவு பெற்ற ஆயுதக்குழு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. யூத மக்கள் தற்போது பாதுகாப்பற்ற சூழலில் வாழ்வதாகக் கவலை தெரிவித்துள்ள பிரிட்டிஷ் பிரதமர், […]

இலங்கை செய்தி

” உழைப்புக்குரிய கௌரவம் பெற்றுக்கொடுக்கப்படும்”

  • May 1, 2026
  • 0 Comments

” உழைப்புக்கு உரிய உண்மையான கௌரவத்தைப் பெற்றுக்கொடுப்பதும், அனைத்து உழைக்கும் மக்களினதும் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான அர்ப்பணிப்பும் எமது அரசாங்கத்தின் அடிப்படைக் கொள்கையாகும். ” இவ்வாறு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். பிரதமரின் மே தின வாழ்த்துச் செய்தி வருமாறு , ” இலங்கையின் தொழிலாளர் வரலாறு என்பது, பல தசாப்தங்களாகத் தமது உரிமைகளை வென்றெடுப்பதற்காக இரத்தமும், கண்ணீரும், வியர்வையும் சிந்திய பெருமைமிக்க போராட்டத்தின் கதையாகும். 1893ஆம் ஆண்டு அச்சுத் தொழிலாளர் வேலைநிறுத்தத்திலிருந்து இந்நாட்டின் உழைக்கும் மக்கள் […]

இலங்கை செய்தி

நாடு இழந்த அபிவிருத்தியை மீட்டெடுப்போம்: ஜனாதிபதி உறுதி!

  • May 1, 2026
  • 0 Comments

நாடு இழந்த அபிவிருத்தியை மீட்டெடுத்து “வளமான நாடு – அழகான வாழ்க்கை” யை கட்டியெழுப்பும் திட்டத்தில், உழைக்கும் மக்களை அதன் முதன்மை சக்தியாக நாம் ஆழமாக நம்புகிறோம் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். அவர் விடுத்துள்ள தொழிலாளர் தின வாழ்த்துச் செய்தியில் கூறப்பட்டுள்ளவை வருமாறு, உலகளாவிய போர்ச் சூழல்களுக்கு மத்தியிலும், ஒரு நாடாகப் பல பொருளாதார வெற்றிகளை ஈட்டிக்கொண்டிருக்கும் தீர்மானமிக்கதொரு தருணத்தில், இலங்கையின் உழைக்கும் மக்கள் இம்முறை தொழிலாளர் தினத்தைக் கொண்டாடுகின்றனர். அமெரிக்க தீர்வை வரி […]

உலகம் செய்தி

ஹார்முஸ் நீரிணை விவகாரம்: அமெரிக்காவின் புதிய யோசனைக்கு ஆதரவு!

  • April 30, 2026
  • 0 Comments

ஹார்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்தை தடையின்றி உறுதி செய்வதற்காக அமெரிக்கா முன்மொழிந்துள்ள புதிய சர்வதேச கூட்டணியில் இணைவது குறித்து ஆஸ்திரேலியா ஆலோசித்து வருகிறது. இந்தப் புதிய முயற்சிக்கு கடல்சார் சுதந்திரக் கட்டமைப்பு என்று பெயரிடப்பட்டுள்ளதுடன், இதில் பங்கேற்பது குறித்து இரு நாடுகளின் உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்தப் பாதுகாப்புத் திட்டமானது ஈரானுடனான அமெரிக்காவின் மற்ற அரசியல் மோதல்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை தெளிவுபடுத்தியுள்ளது. ஆஸ்திரேலிய அரசு தனது முடிவை இன்னும் […]

இலங்கை செய்தி

செம்மணியில் அடுத்து என்ன? இன்று வெளியான அறிவிப்பு!

  • April 30, 2026
  • 0 Comments

“செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளைத் தொடர்வதா? இல்லையா? என்பது, தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள என்புத் தொகுதிகளை முழுமையாக அகழ்ந்து எடுத்த பின்னர் மேற்கொள்ளப்படவுள்ள புதிய ஸ்கேன் பரிசோதனையிலேயே தீர்மானிக்கப்படும்” என்று சட்டத்தரணி ஞா.ரனித்தா தெரிவித்தார். புதைகுழி வழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோர் சார்பாக முன்னிலையாகும் அவர், ஜி.பி.ஆர். ஸ்கேன் பரிசோதனை மற்றும் அகழ்வுப் பணிகளின் தற்போதைய நிலை குறித்து ஊடகங்களிடம் கரத்து வெளியிடுகையிலேயே இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியை வருமாறு, “கடந்த வருடம் […]

இலங்கை செய்தி

அதிக கட்டணம் வசூலித்த நடத்துனருக்கு அபராதம்!

  • April 30, 2026
  • 0 Comments

முல்லைத்தீவு – வவுனியா மார்க்கத்தில் பயணிக்கும் தனியார் பேருந்துகளில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிக கட்டணம் அறிவிட்ட நடத்துனருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் சூ.விமலேஸ்வரன் மேற்படி தகவலை வெளியிட்டுள்ளார். குறித்த மார்க்கத்தில் பயணிக்கும் சில தனியார் பேருந்துகள் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் பணத்துக்கு பற்றுச்சீட்டுகளை வழங்குவதில்லை எனவும், மீதிப் பணம் உரிய முறையில் பயணிகளுக்குத் திருப்பியளிக்கப்படுவதில்லை எனவும் அதிகார சபைக்கு முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. குறிப்பாக, நெடுங்கேணி – […]

உலகம் செய்தி

ஈரான் தூதுக்குழுவுக்கு கனடாவில் கதவடைப்பு!

  • April 30, 2026
  • 0 Comments

கனடா வான்கூவரில் நடைபெறவுள்ள FIFA ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கவந்த ஈரானிய கால்பந்து சம்மேளன அதிகாரிகள், கனடா குடிவரவு அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரான் கால்பந்து கூட்டமைப்பின் தலைவர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் முறைப்படியான விசாக்களை வைத்திருந்தும் இவ்வாறானதொரு நிலை ஏற்பட்டமை தொடர்பில் ஈரான் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளது. ஈரானிய புரட்சிகர காவல்படை (IRGC) அமைப்புடன் தொடர்புடைய மெஹ்தி தாஜ் என்பவருக்கே அனுமதி மறுக்கப்பட்டதாக கனடா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. IRGC ஐ கனடா […]