ஆஸ்திரேலியா செய்தி

பயண எச்சரிக்கை விடுத்தது ஆஸ்திரேலியா!

லண்டனில் இரு யூதர்கள்மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, பாதுகாப்பு எச்சரிக்கை நிலையை ‘தீவிரம்’ என்ற நிலைக்கு பிரிட்டன் உயர்த்தியுள்ளது.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, அங்கு பயணம் செய்யும் ஆஸ்திரேலியப் பயணிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு ஆஸ்திரேலிய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இத்தாக்குதலில் தொடர்புடையதாகக் கருதப்படும் நபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இதற்குப் பின்னால் ஈரான் ஆதரவு பெற்ற ஆயுதக்குழு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

யூத மக்கள் தற்போது பாதுகாப்பற்ற சூழலில் வாழ்வதாகக் கவலை தெரிவித்துள்ள பிரிட்டிஷ் பிரதமர், யூத எதிர்ப்பு உணர்வை ஒடுக்கப் போவதாக உறுதியளித்துள்ளார்.

இத்தாக்குதலுக்குப் பிறகு பிரிட்டனில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

லண்டனில் நிலவும் இந்த பதற்றமான சூழலால் சர்வதேச அளவில் பாதுகாப்பு கவலைகள் அதிகரித்துள்ளன.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!