இலங்கை செய்தி

செம்மணியில் மேலும் 16 எலும்புக் கூடுகள் அடையாளம்!

  • June 8, 2026
  • 0 Comments

செம்மணி மனித புதைகுழியில் மேலும் 16 மனித என்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்டத்தின் 19 ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்று நடைபெற்றன. இதன்போது சிறுவர்களுடைய என்பு கூட்டு தொகுதிகள் உள்ளடங்கலாக 16 மனித என்புகூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. அத்துடன் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட என்பு கூட்டு தொகுதிகளில் 4 என்பு கூட்டு தொகுதிகள் இன்று முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் செம்மணி மனித புதைகுழியில் […]

ஐரோப்பா செய்தி

மீண்டும் போர் வெடித்தால் பாரிய நெருக்கடி ஏற்படும்: EU எச்சரிக்கை!

  • June 8, 2026
  • 0 Comments

மோதலில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பினரையும் உடனடியாகப் பேச்சுவார்த்தைக்கு வருமாறு ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கை தலைவர் Kaja Kallas அழைப்பு விடுத்துள்ளார். சிலவேளை இந்தப் பதற்றம் முழுமையான போராக மாறினால், பிராந்தியம் முழுவதும் மிகப்பெரிய விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்று அவர் எச்சரித்துள்ளார். தற்போதைய சூழலில் அமைதிப் பேச்சுவார்த்தைகளும் தற்காலிக போர்நிறுத்தங்களும் மிகவும் பலவீனமாக இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். சைப்ரஸ் நாட்டின் நிகோசியாவில் நடைபெற்ற பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் உரையாற்றிய அவர் , வன்முறையைத் தவிர்த்து அமைதி […]

உலகம் செய்தி

அமைதியை கடைபிடிக்குமாறு பாகிஸ்தான் அவசர வேண்டுகோள்!

  • June 8, 2026
  • 0 Comments

அமைதியை அடைவதற்குரிய இறுதி இலக்கு மிக அருகில் இருப்பதால், அனைத்துத் தரப்பினரும் பொறுமையைக் கடைபிடிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் Shehbaz Sharif கோரிக்கை விடுத்துள்ளார். இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கிடையில் மீண்டும் போர் மூண்ட நிலையிலேயே , அமைதி பேச்சுக்கு மத்தியஸ்தம் வகிக்கும் பாகிஸ்தான் பிரதமர் மேற்கண்டவாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதற்கிடையில் இஸ்ரேல் மீதான தனது தாக்குதல்களை நிறுத்திக்கொள்வதாக ஈரான் ராணுவம் தெரிவித்துள்ளது. எனினும், லெபனான் மீதான தாக்குதல்கள் தொடர்ந்தால் முன்பை விட மிகவும் கடுமையான முறையில் […]

இலங்கை செய்தி

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு வலியுறுத்தி யாழில் போராட்டம்!

  • June 8, 2026
  • 0 Comments

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சொல்லிசைப் பாடகர் சங்கீத்ஷனை உடனடியாக விடுதலை செய்யக் கோரி இன்று முற்பகல் வல்வெட்டித்துறைச் சந்தியில் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. வல்வெட்டித்துறையின் சமூக ஆர்வலர்கள் மற்றும் இளைஞர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் போராட்டத்தின்போது பயங்கரவாத தடைச்சட்டம் முற்றாக நீக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. இந்தப் போராட்டத்தை நடத்துவதற்கு ஏற்பாடுகளைச் செய்திருந்த சிவில் சமூகச் செயற்பாட்டாளர்களை, நேற்று வல்வெட்டித்துறைப் பொலிஸார் நேரில் அழைத்து கடுமையான அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கியிருந்தனர் என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. […]

இலங்கை செய்தி

இலங்கையிலிருந்து விடைபெறும் சுவிஸ் தூதுவர் வடக்கு ஆளுநருடன் அவசர சந்திப்பு!

  • June 8, 2026
  • 0 Comments

இலங்கையிலிருந்து விடைபெற்றுச் செல்லும் சுவிட்சர்லாந்து தூதுவர் சிறி வோல்ட் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோருக்கிடையிலான விசேட சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் இன்று (08) காலை நடைபெற்றது. இந்தச் சந்திப்பின்போது, சுவிட்சர்லாந்து அரசாங்கத்தால் வடக்கு மாகாணத்தில் கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு செயற்றிட்டங்களுக்குக் ஆளுநர் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டார். மத்திய கிழக்குப் போர் காரணமாக உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள எரிபொருள் விலையேற்றம் மற்றும் அதனால் வடக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள தாக்கங்கள் தொடர்பில் தூதுவர் இதன்போது […]

உலகம் செய்தி

தாக்குதலை உடன் நிறுத்தவும்! இஸ்ரேல், ஈரானுக்கு ட்ரம்ப் உத்தரவு!

  • June 8, 2026
  • 0 Comments

ஈரான் மற்றும் இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளும் உடனடியாக தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார். இஸ்ரேல் தனது பதிலடித் தாக்குதலைத் தொடங்குவதற்கு முன்பே, அந்நாட்டுப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் அமைதி காக்குமாறு ட்ரம்ப் வலியுறுத்தினார் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எனினும், இந்த அறிவுறுத்தலை பின்பற்றாது ஈரான்மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி இருந்தது. இந்நிலையிலேயே ட்ரம்ப் இவ்வாறானதொரு வலியுறுத்தலை விடுத்துள்ளார்.    

உலகம் செய்தி

ஐ.நா. அணுசக்தி கண்காணிப்பு அமைப்புமீது ஈரான் கடும் அதிருப்தி!

  • June 8, 2026
  • 0 Comments

ஐ.நா. அணுசக்தி கண்காணிப்பு அமைப்பான IAEA-வின் அண்மைக்கால நடவடிக்கைகள் குறித்து ஈரான் வெளிவிவகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் Esmaeil Baghaei , கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரான் மீது முன்வைக்கப்படும் எந்தவொரு கண்டனத் தீர்மானத்திற்கும் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் அமெரிக்காவின் தலையீடும், ஐக்கிய நாடுகள் சபையின் ஒருதலைப்பட்சமான அணுகுமுறையும் பிராந்தியத்தின் அமைதிப் பேச்சுவார்த்தைகளை சீர்குலைப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். அணுசக்தி நிலையங்கள் மற்றும் செறிவூட்டப்பட்ட யுரேனியம் தொடர்பான […]

அரசியல் இலங்கை செய்தி

மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு NPP அரசுக்கு வலுக்கிறது அழுத்தம்!

  • June 8, 2026
  • 0 Comments

“வடக்கு, கிழக்குக்கு மட்டும் அல்ல முழு நாட்டுக்கும் மாகாணசபை முறைமை அவசியம். எனவே, மாகாணசபைத் தேர்தலை அரசாங்கம் விரைவில் நடத்த வேண்டும்.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதம நிறைவேற்று அதிகாரி, நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு , “மாகாணசபைத் தேர்தல் விரைவில் நடத்தப்படும் என்பது தேசிய மக்கள் சக்தி வழங்கிய தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாகும். அதனை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தேர்தலை […]

செய்தி விளையாட்டு

விசா சர்ச்சைக்கு மத்தியில் மெக்சிக்கோவில் களமிறங்கியது ஈரான் அணி!

  • June 8, 2026
  • 0 Comments

ஈரானின் உலகக் கோப்பை கால்பந்து அணி மெக்சிகோவில் உள்ள டிஹுவானா (Tijuana) நகரில் தரையிறங்கியுள்ளது. கடந்த மூன்று வாரங்களாக துருக்கியில் பயிற்சி பெற்று வந்த ஈரானிய அணி, அங்கிருந்தே நேற்று மெக்சிக்கோ வந்துள்ளது. தங்களுக்கு அமெரிக்காவிற்குள் நுழைய விசா கிடைக்குமா என்பதில் நிலவிய நிச்சயமற்ற தன்மை காரணமாக, ஈரானிய கால்பந்து சம்மேளனம் , பேச்சுவார்த்தை நடத்தி, தங்களின் முதன்மைப் பயிற்சி முகாமை அரிசோனாவில் இருந்து மெக்சிகோவிற்கு மாற்றியது. ஈரான் அணி விளையாடவிருக்கும் முதல் போட்டிக்கு வெறும் 10 […]

உலகம் கல்வி

போர் நிறுத்த ஒப்பந்தமீறலுக்கு அமெரிக்காவே பொறுப்பு: ஈரான் சீற்றம்!

  • June 8, 2026
  • 0 Comments

போர்நிறுத்த ஒப்பந்த மீறல்களுக்கு அமெரிக்காவே முழுப் பொறுப்பு என்று ஈரான் வெளிவிவகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் Esmaeil Baghaei குற்றம் சாட்டியுள்ளார். பிராந்தியத்தில் இஸ்ரேல் மேற்கொள்ளும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை அமெரிக்கக் கொள்கைகளிலிருந்து பிரித்துப் பார்க்க முடியாது. வாஷிங்டனின் நேரடி ஆதரவு இன்றி இஸ்ரேலால் இத்தகைய அத்துமீறல்களைச் செய்ய இயலாது எனவும் Esmaeil Baghaei சுட்டிக்காட்டியுள்ளார். மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழலுக்கு அமெரிக்காவின் தலையீடே முதன்மைக் காரணம் என ஈரான் கருதுகின்றது.