இலங்கை செய்தி

காணிகளை விடுவிக்கக் கோரி 15 ஆம் திகதி யாழில் போராட்டம்!

  • June 11, 2026
  • 0 Comments

வலிகாமம் வடக்கு மக்கள் தமது சொந்த கிராமங்களிலிருந்து இடம்பெயர்ந்து 37 வருடங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையிலும், உயர் பாதுகாப்பு வலயங்களாக முடக்கப்பட்டுள்ள தமது பூர்வீகக் காணிகளை உடனடியாக விடுவிக்கக் கோரி, எதிர்வரும் திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் கவனவீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இந்தப் போராட்டம் குறித்து மயிலிட்டி மீள்குடியேற்ற அபிவிருத்திக் குழுவினர் ஊடகங்கள் மூலம் விசேட அறிவித்தலை விடுத்துள்ளனர். அந்த அறிவித்தலில் அவர்கள் மேலும் தெரிவித்ததாவது:- “கடந்த 1990 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15 ஆம் திகதி எமது சொந்த […]

இந்தியா உலகம் செய்தி

அமெரிக்கா நடத்திய தாக்குதலில் மூன்று இந்திய மாலுமிகள் பலி!

  • June 11, 2026
  • 0 Comments

Palau நாட்டுக் கொடியுடன் பயணித்த Settebello கப்பல் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் மூன்று இந்திய மாலுமிகள் உயிரிழந்துள்ளனர். இந்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் Sarbananda Sonowal  இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். ஹார்முஸ் நீரிணை கடல்வழிப் பாதையில் விதிக்கப்பட்டுள்ள முற்றுகையை மீறியதாகக் குற்றம் சாட்டி, புதன்கிழமையன்று அந்த எண்ணெய் கப்பலைத் தாக்கிச் செயலிழக்கச் செய்ததாக அமெரிக்க மத்திய கட்டளையகம் தெரிவித்துள்ளது. இச்சம்பவத்தில் தொடக்கத்தில் மூன்று இந்திய மாலுமிகளைக் காணவில்லை என்றும், 21 இந்தியப் பணியாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர் […]

இலங்கை செய்தி

எல்-நினோ காலநிலையால் ஏற்படும் தாக்கங்கள் குறித்து ஆராய்வு!

  • June 11, 2026
  • 0 Comments

எல்-நினோ காலநிலையால் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் மற்றும் அதனை எதிர்கொள்வதற்காக நிறுவனங்கள் கொண்டுள்ள திட்டங்கள் குறித்து ஆராயும் கலந்துரையாடலொன்று, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (11) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. வளிமண்டலவியல் திணைக்களம், நீர்ப்பாசன திணைக்களம், மத்திய சுற்றாடல் அதிகார சபை, மகாவலி அதிகார சபை, அனர்த்த முகாமைத்துவ நிலையம், மின்சார உற்பத்தி லங்கா தனியார் நிறுவனம் மற்றும் தேசிய கட்டமைப்பு செயற்பாட்டு தனியார் நிறுவனம் உள்ளிட்ட தொடர்புடைய நிறுவனங்களின் பிரதிநிதிகளின் பங்கேற்புடன் […]

ஐரோப்பா செய்தி

ஈரான்மீது புதிய தடைகளை EU விதிக்க வேண்டும்: இத்தாலி வலியுறுத்து!

  • June 11, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கில் நிலவும் பதற்றத்தைத் தணிக்க ஈரான் ஒத்துழைக்க மறுத்தால், அந்த நாட்டின் மீது ஐரோப்பிய ஒன்றியம் புதிய பொருளாதாரத் தடைகளை விதிக்க வேண்டுமென இத்தாலி வலியுறுத்தியுள்ளது. ஈரான் தனது தவறான போக்கைத் தொடர்ந்தால் கடுமையான நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என இத்தாலியப் பிரதமர் Giorgia Meloni, நாடாளுமன்றத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளார். G& உச்சிமாநாட்டிற்கு முன்னதாக நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், இத்தாலியின் வெளியுறவுக் கொள்கை குறித்த நிலைப்பாட்டைத் தெளிவாகப் பதிவு செய்துள்ளார். மேலும், இஸ்ரேலிய அமைச்சர் ஒருவரின் […]

ஐரோப்பா செய்தி

வட்டி விகிதங்களை உயர்த்த ஐரோப்பிய மத்திய வங்கி திட்டம்!

  • June 11, 2026
  • 0 Comments

ஈரான் போரினால் எரிசக்தி விலைகள் உயர்ந்துள்ள நிலையில், ஐரோப்பாவில் நிலவும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த ஐரோப்பிய மத்திய வங்கி வட்டி விகிதங்களை உயர்த்தத் திட்டமிட்டுள்ளது. பணவீக்கம் நிர்ணயிக்கப்பட்ட இரண்டு சதவீத இலக்கைத் தாண்டி தற்போது மூன்று சதவீதத்திற்கும் மேல் உள்ளதால், இந்த நிதி நிலை மாற்றம் அவசியமெனக் கருதப்படுகின்றது. பொருளாதார வளர்ச்சி மந்தமாக இருந்தாலும், முதலீட்டாளர்களின் நம்பிக்கையைத் தக்கவைக்கவும் விலைவாசி உயர்வைக் குறைக்கவும் வங்கி அதிகாரிகள் இந்த முடிவை எடுக்க உள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது. சுமார் மூன்று ஆண்டுகளுக்குப் […]

இலங்கை செய்தி

யானை தாக்கி பெண் பலி : திருமலையில் சோகம்!

  • June 11, 2026
  • 0 Comments

திருகோணமலை மாவட்டத்தில் காட்டு யானை தாக்கி பெண்ணொருவர் பலியாகியுள்ளார். மேலும் ஒரு பெண் காயமடைந்துள்ளார். திருகோணமலை சேருவில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுமேதங்கபுர பகுதியில் யானை தாக்கி 73 வயது பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக சேறுநுவர பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் இன்று வியாழக்கிழமை (11) காலை இடம்பெற்றுள்ளது. யானை தாக்கி காயமடைந்த இப் பெண் சேருவில வைத்தியசாலையிருந்து திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அதேவேளை, கோமரங்கடவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மயிலவெவ பகுதியில் […]

இலங்கை செய்தி

உணவு ஒவ்வாமையால் 15 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

  • June 11, 2026
  • 0 Comments

திருகோணமலை , கந்தளாய் ஆயிஷா பெண்கள் மகா வித்யாலயத்தைச் சேர்ந்த 15 மாணவர்கள் உணவு ஒவ்வாமை காரணமாக இன்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஊட்டச்சத்துத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட உணவு ஒவ்வாமையானதாலேயே மாணவர்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவாக அன்னாசிப்பழம் வழங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதேவேளை மஹதிவுல்வெவ பாடசாலையில் உணவு ஒவ்வாமை காரணமாக இருபதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் நேற்று (10) அனுமதிக்கப்பட்டனர். குறித்த மாணவர்களுக்கு பசும்பால் வழங்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது.

செய்தி பொழுதுபோக்கு

பாரதிராஜாவின் பூதவுடல் அரச மரியாதையுடன் இன்று நல்லடக்கம்

  • June 11, 2026
  • 0 Comments

மறைந்த இயக்குநர் பாரதிராஜாவின் பூதவுடலுக்கு ஏராளமான ரசிகர்கள் தற்போது அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் அவரது உடல் அரசு மரியாதையுடன் இன்று (11) பிற்பகல் 3 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. பாரதிராஜாவின் உடல் அடக்கத்துக்காக தேனி மாவட்டம் காட்ரோடில் உள்ள அவரது பண்ணை வீட்டுக்கு இன்று காலை எடுத்துவரப்பட்டது. பாரதிராஜாவின் சொந்த ஊர் தேனி அல்லிநகரம் ஆகும். எந்த பின்னணியும் இல்லாமல் கிராமத்தில் இருந்து சினிமாவில் உச்சம் தொட்டவர் இவர். மண்மணம் வீசும் திரைப்படங்களை அதிகம் எடுத்ததுடன் […]

இலங்கை செய்தி

காணி பிரச்சினை குறித்து ஆஸ்திரேலிய தூதுவர் ஆராய்வு!

  • June 11, 2026
  • 0 Comments

இலங்கைக்கான ஆஸ்திரேலிய தூதுவர் மேத்யூ டக்வொர்த் , கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகரவை நேற்று சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார். ஆஸ்திரேலிய தூதுவர் கிழக்குக்கு விஜயம் மேற்கொள்ளும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும். கிழக்கு மாகாணத்தில் நடைபெற்று வரும் அபிவிருத்திப் பணிகள், அதற்கு ஆஸ்திரேலிய அரசாங்கம் வழங்கக்கூடிய ஆதரவு, கடல்சார் மற்றும் பிராந்தியப் பாதுகாப்பு, சுற்றுலாத் தொழில், மீன்பிடி மற்றும் விவசாயத் தொழில்களின் அபிவிருத்தி ஆகியவை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. மேலும், கிழக்கு மாகாணத்தில் உள்ள நிலம் […]

இலங்கை செய்தி

சுரேஷ் சலே சூழச்சி: வெளியாகும் திடுக்கிடும் தகவல்கள்!

  • June 11, 2026
  • 0 Comments

” உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவ சூழ்ச்சியுடன் சுரேஷ் சலேவுக்கு தொடர்பு உள்ளது. நீர்கொழும்பு பகுதியிலுள்ள கத்தோலிக்க தேவாலயத்துக்கு வரும் பக்தர்களின் தகவல்களை திரட்டியுள்ளார். சுரேஷ் சலே விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை. திட்டமிட்ட அடிப்படையிலேயே உணவு தவிர்ப்பு போராட்டத்தைக்கூட முன்னெடுத்திருந்தார். இவ்வாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். தொலைபேசி மற்றும் மடிக்கனிணி என்பவற்றின் கடவுச்சொல்லைக்கூட அவர் விசாரணை அதிகாரிகளுக்கு வழங்கவில்லை. தகவல்களை மூடிமறைக்க முற்படுகின்றார். ஆனால் இதுவரை கிடைக்கப்பெற்ற விஞ்ஞானப்பூர்வமான சாட்சியங்களின் அடிப்படையில் அவருக்கு மேற்படி […]