ஐரோப்பா செய்தி

பாதுகாப்பு உத்தரவாதத்தை வழங்கினார் பிரிட்டன் பிரதமர்!

  • June 12, 2026
  • 0 Comments

நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யத் தேவையான அனைத்து வளங்களும் ராணுவத்திற்கு வழங்கப்படும் என்று பிரித்தானியப் பிரதமர் Keir Starmer உறுதியளித்துள்ளார். பாதுகாப்புச் செயலாளர் John Healey விலகியுள்ள சூழ்நிலையிலேயே பிரதமர் இவ்வாறு கூறியுள்ளார். அரசாங்கத்தின் பாதுகாப்பு முதலீட்டுத் திட்டம் குறித்தும் பிரதமர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இதேவேளை, ஆயுதப் படைகளின் அமைச்சர் Al Carns நேற்று நள்ளிரவில் தனது பதவியை ராஜினாமா செய்துள்ள போதிலும், அது குறித்து பிரதமர் இதுவரை பகிரங்கமாக எந்தவொரு கருத்தும் தெரிவிக்கவில்லை. எனினும், நாட்டின் […]

அரசியல் இலங்கை செய்தி

அன்று போராடியவர்கள் இன்று AC அறையில்: நாமல் கொதிப்பு!

  • June 12, 2026
  • 0 Comments

“வடக்கில் ஒரு கதையும், கிழக்கில் வேறொரு கதையும் இனிவரும் காலங்களில் பேசமுடியாது.” என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச எம்.பி. தெரிவித்தார். திருகோணமலை நகர சபை மண்டபத்தில் இன்று (12), நடைபெற்ற திருகோணமலை தொகுதி ஆதரவாளர்களுக்கான கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகையிலேயே நாமல் ராஜபக்ச் இவ்வாறு கூறினார். “தொழிற்சாலைகள் மூடப்படும்போது அதற்கு எதிராக ஆளுங்கட்சியினர் குரல் எழுப்புவதில்லை. ஆனால் எதிரணியில் இருக்கும்போது போராடினார்கள். கடந்த காலங்களில் ஏழை மக்களுக்காக வீதிகளில் இறங்கி போராடியவர்கள் […]

உலகம் செய்தி

மீண்டும் பரபரப்பு! ட்ரம்பின் கருத்துக்கு ஈரான் பதிலடி!!

  • June 12, 2026
  • 0 Comments

அமெரிக்காவுடனான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தம் தொடர்பில் இன்னும் இறுதி முடிவு எட்டப்படவில்லை என்று ஈரான் தெரிவித்துள்ளது. எனினும், விரைவில் ஒரு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் மிகக் கடுமையான தாக்குதலை நடத்தும் என்று வியாழக்கிழமையன்று டிரம்ப் அறிவித்திருந்தார். இந்நிலையில் பேச்சுவார்த்தையாளர்கள் ஈரானுடன் ஒரு சிறந்த சமரசத்தை எட்டியுள்ளதால், அந்தத் தாக்குதல்களை ரத்து செய்வதாக அவர் தெரிவித்தார். இது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட […]

உலகம் செய்தி

தென்கொரியா முன்னாள் ஜனாதிபதிக்கு 30 ஆண்டுகள் சிறை!

  • June 12, 2026
  • 0 Comments

தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி Yoon Suk Yeol இற்கு 30 வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தென் கொரியாவின் முன்னாள் ஜனாதிபதி Yoon Suk Yeol கடந்த 2024-ஆம் ஆண்டு ராணுவச் சட்டத்தைப் பிறப்பிப்பதற்காக, வேண்டுமென்றே வட கொரியா மீது ட்ரோன்களை ஏவிச் சதி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியது மற்றும் எதிரிக்கு உதவியது போன்ற குற்றங்களுக்காக அவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. முன்னதாக, உள்நாட்டுப் புரட்சிக்குத் தலைமை […]

அரசியல் இலங்கை செய்தி

தெற்கு அரசியலில் பரபரப்பு: பிக்குகளை நாடும் எதிரணி!

  • June 12, 2026
  • 0 Comments

நாட்டில் தற்போது நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் மகாநாயக்க தேரர்களிடம் முறையிடுவதற்கு கூட்டு எதிரணி தீர்மானித்துள்ளது. கூட்டு எதிரணியின் விசேட கூட்டமொன்று கொழும்பில் நடைபெற்றது. இதன்போதே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைப் பிரதிநிதியையும் சந்தித்து பேச்சு நடத்துவதற்கு கூட்டு எதிரணி திட்டமிட்டுள்ளது. “ சர்வதேச நாணய நிதியத்தின் அனைத்து நிபந்தனைகளையும் ஏற்கும் நிலைப்பாட்டிலேயே இந்த அரசாங்கம் இருக்கின்றது. இதனால் எமது மக்களுக்கு ஏற்படும் நெருக்கடி தொடர்பில் இதன்போது தெளிவுபடுத்தப்படும்.” என்று கூட்டு எதிரணி […]

ஆஸ்திரேலியா செய்தி விளையாட்டு

25 வயதில் முடிந்த வாழ்க்கை!

  • June 12, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியா, மெல்போர்னைச் சேர்ந்த பிரபல தடகள வீராங்கனை Jemma Stapleton , தனது 25வது பிறந்தநாளைக் கொண்டாடிய சில நாட்களில் தாய்லாந்தில் காலமானார். புகழ்பெற்ற Stawell Gift ஓட்டப்பந்தயத்தில் இறுதிப்போட்டி வரை முன்னேறிய இவர், தனது குடும்பத்தினருடன் Koh Samui தீவில் சுற்றுலா சென்றிருந்தபோது இந்தத் துயரம் நிகழ்ந்தது. அவரது மறைவுக்கான காரணம் இன்னும் அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்படவில்லை. எனினும், ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சு அவரது குடும்பத்தினருக்குத் தேவையான உதவிகளைச் செய்து வருகிறது. ஜெம்மாவின் சகோதரர் மற்றும் வாழ்க்கைத் […]

செய்தி விளையாட்டு

தென்கொரியாவின் கனவு வெற்றி நனவானது!

  • June 12, 2026
  • 0 Comments

உலகக் கோப்பை கால்பந்து தொடரின் தொடரில் தென் கொரியா மற்றும் செக் குடியரசு அணிகள் மோதிய விறுவிறுப்பான போட்டியில் தென்கொரியா அணி வெற்றிபெற்றுள்ளது. ஆட்டத்தின் பெரும்பகுதியை தென் கொரியா கட்டுப்படுத்தினாலும், செக் குடியரசு அணி முதல் கோல் அடித்து முன்னிலை பெற்றது. எனினும், ஹ்வாங் இன்-பியோமின் சிறப்பான ஆட்டத்தால் தென் கொரியா விரைவாகப் பதிலடி கொடுத்து சமநிலையை எட்டியது. இறுதியில் மாற்று வீரராக வந்த ஓ ஹியோன்-க்யு ஆட்டத்தின் 80-வது நிமிடத்தில் வெற்றிக்கான கோலை அடித்து தனது […]

செய்தி விளையாட்டு

முதல் ஆட்டத்திலேயே 3 சிவப்பு அட்டைகள்!

  • June 12, 2026
  • 0 Comments

மெக்சிகோ சிட்டியின் அஸ்டெகா மைதானத்தில் நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் தொடக்க ஆட்டத்தில், மெக்சிகோ அணி தென்னாப்பிரிக்காவை 2-0 என்ற கணக்கில் வீழ்த்தியது. மெக்சிகோ அணி தனது உலகக் கோப்பை வரலாற்றுத் தொடக்க ஆட்டங்களில் பெற்ற முதல் வெற்றி இதுவாகும். ஜூலியன் குயினோன்ஸ் மற்றும் ரவுல் ஜிமெனெஸ் ஆகியோர் கோல்களை அடித்து அணியின் வெற்றிக்கு உதவினர். இந்த ஆட்டத்தில் இரு அணிகளையும் சேர்த்து மொத்தம் மூன்று சிவப்பு அட்டைகள் வழங்கப்பட்டது ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வாக அமைந்தது. […]

இலங்கை செய்தி

தமிழர் தாயகத்தில் காணி ஆக்கிரமிப்பு: ஐரோப்பாவில் முறைப்பாடு!

  • June 12, 2026
  • 0 Comments

தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் காணி ஆக்கிரமிப்பு உள்ளிட்ட பல்வேறு மனித உரிமை மீறல்கள் குறித்து, ஐரோப்பிய ஒன்றியத்தின் மூத்த அதிகாரியிடம் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா. சாணக்கியன் நேரில் முறையிட்டுள்ளார். ஐரோப்பிய வெளிநாட்டு நடவடிக்கை சேவையின் தெற்காசியப் பிரிவின் தலைவரான சார்ல்ஸ் வைட்லியை, பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸ் நகரில் நேற்று சந்தித்துக் கலந்துரையாடிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தமிழ் சொல்லிசைப் பாடகரான கணேஷ்குமார் சங்கீத்ஷன் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள விவகாரம் குறித்து […]

இலங்கை செய்தி

தோண்டத் தோண்ட எலும்புக்கூடுகள்: பதறவைக்கும் செம்மணி!

  • June 12, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழியின் நேற்றைய அகழ்வின் போது ஒரு சிறுவரின் எலும்புக்கூட்டுத் தொகுதி உட்பட 9 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. மேலும் செம்மணி மனிதப் புதைகுழியில் அடையாளம் காணப்பட்ட எலும்புக்கூட்டுத் தொகுதிகளின் எண்ணிக்கை 341ஆக அதிகரித்துள்ளது. செம்மணி மனிதப் புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 22ஆம் நாள் அகழ்வு நேற்று இடம்பெற்றது. நேற்றைய அகழ்வின் போது புதிதாக 2 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு சுத்தம் செய்யப்பட்டு இலக்கமிடப்பட்டுள்ளன. […]