தெற்கு அரசியலில் பரபரப்பு: பிக்குகளை நாடும் எதிரணி!
நாட்டில் தற்போது நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் மகாநாயக்க தேரர்களிடம் முறையிடுவதற்கு கூட்டு எதிரணி தீர்மானித்துள்ளது.
கூட்டு எதிரணியின் விசேட கூட்டமொன்று கொழும்பில் நடைபெற்றது.
இதன்போதே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைப் பிரதிநிதியையும் சந்தித்து பேச்சு நடத்துவதற்கு கூட்டு எதிரணி திட்டமிட்டுள்ளது.
“ சர்வதேச நாணய நிதியத்தின் அனைத்து நிபந்தனைகளையும் ஏற்கும் நிலைப்பாட்டிலேயே இந்த அரசாங்கம் இருக்கின்றது.
இதனால் எமது மக்களுக்கு ஏற்படும் நெருக்கடி தொடர்பில் இதன்போது தெளிவுபடுத்தப்படும்.” என்று கூட்டு எதிரணி உறுப்பினர் சுகீஸ்வர பண்டார தெரிவித்தார்.
எதிரணிகளை ஒடுக்கும் வகையிலேயே நாட்டின் சட்டத்தை அரசாங்கம் அமுல்படுத்துகின்றது.
ஆளுங்கட்சிக்கு எதிராக சட்டம் செயல்படுவதில்லை. அரசாங்கத்துக்கு தேவையான வகையிலேயே பொலிஸ்மா அதிபர் செயல்படுகின்றார் எனவும் அவர் கூறினார்.




