உலகம் செய்தி

ஈரான் வெளியுறவு அமைச்சர் இஸ்லாமாபாத்துக்கு பயணம் – போர்நிறுத்த பேச்சுவார்த்தையில் பெரும் குழப்பம்

  • April 24, 2026
  • 0 Comments

ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் ஆரக்சி (Abbas Araghchi) இன்று இரவு இஸ்லாமாபாத் நகருக்கு செல்வார் என எதிர்பார்க்கப்படுவதாக பாகிஸ்தானின் அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஆனால், இந்த தகவல் குறித்து ஈரான் அல்லது அமெரிக்கா தரப்பிலிருந்து இதுவரை எந்தவோரு அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தலும் வெளியாகவில்லை. பாகிஸ்தானின் துணைப் பிரதமர் மற்றும் இராணுவத் தளபதியுடன் ஈரான் வெளியுறவு அமைச்சர் உரையாடிய சில மணி நேரங்களுக்குப் பின்னரே இந்த தகவல் வெளியாகியுள்ளது. அந்த பேச்சுவார்த்தையில் “போர் நிறுத்தம் தொடர்பான பிரச்சினைகள்” குறித்து […]

உலகம் செய்தி

லெபனானில் காயமடைந்த இந்தோனேசிய அமைதிப்படை வீரர் உயிரிழப்பு

  • April 24, 2026
  • 0 Comments

லெபனானில் பணியாற்றி வந்த  யூனிஃபில் அமைதிப்படையில் சேர்ந்த இந்தோனேசிய வீரர் ஒருவர், கடந்த மாதம் இஸ்ரேலிய தாக்குதலில் காயமடைந்ததைத் தொடர்ந்து மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். யூனிஃபில் வெளியிட்ட தகவலின்படி, Riko Pramudia என்ற கார்ப்பரல் (Corporal), மார்ச் 29ஆம் திகதி இரவு அட்சித் அல் குசைர் பகுதியில் உள்ள தளத்தில் ஏற்பட்ட எறிபொருள் வெடிப்பில் கடுமையாக காயமடைந்தார். இந்த சம்பவத்திற்குப் பின்னர், மோதலில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பினரும் சர்வதேச சட்டத்தின் கீழ் தங்களின் கடமைகளை கடைப்பிடித்து, ஐ.நா. பணியாளர்கள் […]

உலகம் செய்தி

தெற்கு லெபனானில் பதற்றம் அதிகரிப்பு: இஸ்ரேலிய இராணுவத்தின் புதிய எச்சரிக்கை

  • April 23, 2026
  • 0 Comments

இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையே போர்நிறுத்த பேச்சுவார்த்தைகள்  நடைபெற உள்ள நிலையில், லெபனானின் தெற்குப் பகுதியில் பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இஸ்ரேலிய விமானப்படை X தளத்தில் வெளியிட்ட தகவலின்படி, தெற்கு லெபனானின் செஜௌட் பகுதியில் உள்ள ஹிஸ்புல்லா ஏவுதளத்தில் செயல்பட்டு வந்த ஒருவரை ஒழித்துவிட்டதாக தெரிவித்துள்ளது. ஹிஸ்புல்லா அமைப்பின் தொடர்ச்சியான பயங்கரவாத நடவடிக்கைகள் காரணமாக அந்தப் பகுதியில் இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கைகள் தொடரும் நிலையில், லெபனானின் தெற்கு எல்லை கிராம மக்களுக்கு இஸ்ரேலிய […]

உலகம் செய்தி

லெபனானில் பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் : இஸ்ரேலுக்கு எதிராக ஜனாதிபதி கண்டனம்

  • April 23, 2026
  • 0 Comments

லெபனானில் பத்திரிகையாளர்களை இஸ்ரேல்  தொடர்ச்சியாகக் குறிவைப்பதாக அந்நாட்டு ஜனாதிபதி குற்றம் சாட்டியுள்ளார். இதுபோன்ற கொலைகளைத் தடுக்க சர்வதேச சமூகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இந்தக் குற்றச்சாட்டு, நேற்று இஸ்ரேலிய தாக்குதலில் பத்திரிகையாளர் அமல் கலீல் உயிரிழந்ததையடுத்து எழுந்துள்ளது. அவரது மரணத்தை நினைவுகூரும் வகையில், இன்று காலை பெய்ரூட்டில் உள்ள தியாகிகள் சதுக்கத்தில் பத்திரிகையாளர்கள் மௌன அஞ்சலி செலுத்தினர். அவர் பணியாற்றிய “அல் அக்பர்” நாளிதழின் முதல் பக்கத்தில், கையில் ஒலிவாங்கியுடன் புன்னகைக்கும் […]

உலகம் செய்தி

ஹோர்முஸ் நீரிணையில் பெரும் பதற்றம் : அமெரிக்கா–ஈரான் இடையே பேச்சுவார்த்தைகளும் தோல்வி

  • April 23, 2026
  • 0 Comments

ஹோர்முஸ் நீரிணையை சுற்றியுள்ள இரு தரப்பு முற்றுகைகள் காரணமாக, சர்வதேச பேச்சுவார்த்தைகள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. அமெரிக்காவும் ஈரானும் தங்கள் நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்காத நிலையில், பதற்றம் மேலும் அதிகரித்து வருகிறது. இந்த முற்றுகையால் ஏற்படும் பொருளாதார அழுத்தம், ஈரானை சமரசத்திற்கு கொண்டு வரும் என அமெரிக்கா நம்புகிறது. ஆனால், அதன் தாக்கம் பொதுமக்களின் வாழ்வில் தீவிரமாகப் பிரதிபலிக்கிறது. வேலை இழப்பு மற்றும் விலையேற்றம் குறித்து மக்கள் கவலை வெளியிடுகின்றனர். இந்நிலையில், ஈரான் தனது நிலைப்பாட்டை மாற்ற […]

உலகம் செய்தி

மத்திய கிழக்கில் இரட்டை போர் நிறுத்தம் – தற்காலிக அமைதி

  • April 20, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கில் தற்போது இரண்டு பகுதிகளில் போர் நிறுத்தம் அமுலில் உள்ளது. அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயும், மற்றொன்று இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையேயும் போர் நிறுத்தம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான இரண்டு வார போர் நிறுத்தம் புதன்கிழமை நிறைவடையவுள்ளது. இதனிடையே, ஓமான் வளைகுடாவில் ஈரான் கொடி ஏற்றப்பட்ட சரக்குக் கப்பலை அமெரிக்க கடற்படை கைப்பற்றிய சம்பவம் பதற்றத்தை அதிகரித்துள்ளது. இதனை போர் நிறுத்த மீறல் என ஈரான் குற்றம் சுமத்தியுள்ளது. இதேவேளை, இஸ்ரேல் […]