உலகம் செய்தி

ஹோர்முஸ் நீரிணையில் பெரும் பதற்றம் : அமெரிக்கா–ஈரான் இடையே பேச்சுவார்த்தைகளும் தோல்வி

ஹோர்முஸ் நீரிணையை சுற்றியுள்ள இரு தரப்பு முற்றுகைகள் காரணமாக, சர்வதேச பேச்சுவார்த்தைகள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

அமெரிக்காவும் ஈரானும் தங்கள் நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்காத நிலையில், பதற்றம் மேலும் அதிகரித்து வருகிறது.

இந்த முற்றுகையால் ஏற்படும் பொருளாதார அழுத்தம், ஈரானை சமரசத்திற்கு கொண்டு வரும் என அமெரிக்கா நம்புகிறது. ஆனால், அதன் தாக்கம் பொதுமக்களின் வாழ்வில் தீவிரமாகப் பிரதிபலிக்கிறது. வேலை இழப்பு மற்றும் விலையேற்றம் குறித்து மக்கள் கவலை வெளியிடுகின்றனர்.

இந்நிலையில், ஈரான் தனது நிலைப்பாட்டை மாற்ற தயாராக இல்லை. இந்த சவால்களை தாங்கிக்கொள்ள முடியும் என்றும், இறுதியில் அமெரிக்காதான் தளர்வதாகும் என்றும் அந்த நாடு நம்புகிறது.

இந்த நெருக்கடியை தீர்க்க, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் மத்தியஸ்த முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன.

இதற்கிடையில், ஈரானின் தலைமை பேச்சுவார்த்தையாளர் முகமது பகர் காலிபாஃப், அமெரிக்காவின் நடவடிக்கைகள் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறுவதாக குற்றம்சாட்டியுள்ளார். குறிப்பாக, துறைமுக முற்றுகையும், டொனால்ட் டிரம்ப் விடுத்த குண்டுவீச்சு மிரட்டல்களும் “உண்மையான பேச்சுவார்த்தைக்கு” தடையாக உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

போர் நிறுத்த ஒப்பந்தத்தின் படி, கடல்வழிப் பாதையை முழுமையாக திறந்து வைப்பது ஈரானின் பொறுப்பாக இருந்தாலும், அது தன் நிபந்தனைகளின் பேரிலேயே நடைமுறைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!