தெற்கு லெபனானில் பதற்றம் அதிகரிப்பு: இஸ்ரேலிய இராணுவத்தின் புதிய எச்சரிக்கை
இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையே போர்நிறுத்த பேச்சுவார்த்தைகள் நடைபெற உள்ள நிலையில், லெபனானின் தெற்குப் பகுதியில் பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இஸ்ரேலிய விமானப்படை X தளத்தில் வெளியிட்ட தகவலின்படி, தெற்கு லெபனானின் செஜௌட் பகுதியில் உள்ள ஹிஸ்புல்லா ஏவுதளத்தில் செயல்பட்டு வந்த ஒருவரை ஒழித்துவிட்டதாக தெரிவித்துள்ளது.
ஹிஸ்புல்லா அமைப்பின் தொடர்ச்சியான பயங்கரவாத நடவடிக்கைகள் காரணமாக அந்தப் பகுதியில் இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கைகள் தொடரும் நிலையில், லெபனானின் தெற்கு எல்லை கிராம மக்களுக்கு இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகளின் செய்தித் தொடர்பாளர் அவிச்சாய் அத்ராயீயும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதனிடையே, கியாம் நகரில் குண்டுவெடிப்பும், பின்ட் ஜெபெயில் நகரில் வெடிப்பும் நிகழ்ந்ததாக லெபனான் அரசுக்குச் சொந்தமான தேசிய செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
ஆனால், இந்தக் கூற்றுகள் குறித்து இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ கருத்தையும் தெரிவிக்கவில்லை.
மேலும், இந்த தகவல்களை சுயாதீனமாக உறுதிப்படுத்த முடியவில்லை என்றும் கூறப்படுகிறது.




