ஆஸ்திரேலியாவில் போலி துப்பாக்கி ஏந்தி மக்களை மிரட்டியோர் கைது
ஆஸ்திரேலியா, சிட்னியின் பிரதான பொழுதுபோக்கு பகுதியில், போலியான துப்பாக்கியை ஏந்திச் சென்று மக்களிடையே பெரும் பீதியையும் அப்பகுதி முடக்கத்தையும் (Lockdown) ஏற்படுத்திய சம்பவம் தொடர்பாக இருவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. நேற்று பிற்பகல் மூர் பார்க் பொழுதுபோக்கு பகுதியில் (Moore Park Entertainment Quarter), அமெரிக்கக் கொடி பொறிக்கப்பட்ட குண்டுதுளைக்காத உடையும், நெஞ்சில் துப்பாக்கி போன்ற அமைப்பும் நாடாவால் (tape) ஒட்டப்பட்ட நிலையில் நபர் ஒருவர் உணவகங்களுக்குள் நுழைந்தும் வெளியேறியும் உலா வந்துள்ளார். இதனைக் கண்ட பல சாட்சிகள் […]













